தினமணி 30.06.2010
கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு விதிமுறைகளை தளர்த்த வேண்டும்
மதுரை, பிப்.15: மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஏழை, எளியவர்கள் வீடுகள் கட்டுவதற்கு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று வடக்கு மண்டலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி ஆணையாளர் ராஜகாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஜவகர்லால் நேரு நகர் புனரமைப்புத் திட்டத்தில் வடக்கு மண்டலத்தில் ஏராளமான ஏழை, எளியவர்கள் ஆர்வத்துடன் கான்கிரீட் வீடுகள் கட்டி உள்ளனர். மேலும் பலர் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
இந் நிலையில் திடீரென மேலும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, வீடுகள் கட்டுவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.
வடக்கு மண்டலத்தில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் பயன்பாட்டுக்கு செயல்படுத்தப்பட்ட 2}ம் கட்ட வைகை கூட்டுக் குடிநீர் திட்டம், வடக்குப் பகுதியில் உள்ள சில வார்டுகளுக்கு இன்னும் வந்துசேரவில்லை.
வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும் குடிநீரை தேக்கி விநியேôகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கருப்பையா, மு.சேது, நீலமேகம் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.