Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரைவில் திட்ட மதிப்பீடு நகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

Print PDF

தினகரன் 30.06.2010

விரைவில் திட்ட மதிப்பீடு நகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

நகராட்சி பொறியாளர் ராஜா: கரூர் நகராட்சிக்கான ரூ.25 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் தொடர்பாக இன்று சென்னையில் துணைமுதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதால் நகராட்சி ஆணையர் சென்றுள்ளார். நகராட்சி மூலம் கர்டர் அகற்றப்பட்டதால், இப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.என்றார். உறுப்பினர் சூர்யா கதிரவன்: கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக அங்கிருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டது. தற்போது 5 வயதிற்கு உட்பட்ட 40 குழந்தைகள் அங்குள்ளனர். அவர்களுக்கு உரிய கட்டடம் கட்டித்தராமல் அவதிபடுகின்றனர் என்றார். நகராட்சி தலைவர்: விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டிதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கரூர் நகராட்சி மூலம் வடக்கு பசுபதிபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி கரூர் ஜேசிஐ போர்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான சாவியை நகராட்சி தலைவர் ஜேசிஐ போர்ட் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

Last Updated on Wednesday, 30 June 2010 11:50