Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை காலங்களில் தண்ணீர் தேங்காது: பக்கிங்ஹாம் உள்ளிட்ட பெரிய வடிகால்கள் மேம்படுத்தும் பணி 3 ஆண்டுகளில் முடியும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Print PDF

தினமணி 27.07.2010

மழை காலங்களில் தண்ணீர் தேங்காது: பக்கிங்ஹாம் உள்ளிட்ட பெரிய வடிகால்கள் மேம்படுத்தும் பணி 3 ஆண்டுகளில் முடியும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூலை 26: பொதுப் பணித்துறை சார்பில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை மேம்படுத்தும் பணிகள் 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் நிறைவு பெறும்போது, பெரு மழை காலங்களில் சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

÷இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கண்காணிப்பு பொறியாளர் கே.விஜய்குமார், செயற்பொறியாளர்கள் மகேஸ்வரன், காந்திமதி நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

÷மழை காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களை தடுக்கும் வகையில் பொதுப்பணித் துறையின் கீழ் வரும் பெரிய வடிகால், நீர்வழித் தடங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சிறிய வடிகால்களை ஒருங்கிணைத்து சீர் செய்ய மாநகராட்சி திட்டமிட்டது.

÷இதனடிப்படையில் சென்னை முழுவதும் 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

÷இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

÷பொதுப் பணித்துறை மூலம் சென்னை நகரில் வடக்கு பக்கிங்ஹாம், மத்திய பக்கிங்ஹாம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயினை மேம்படுத்துதல், ரூ.25 கோடியில் விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயினை மேம்படுத்துதல், ரூ.53 கோடியில் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயின் வெள்ள நீரினை ஒக்கியம் மடுவில் இருந்து கடலுக்குத் திருப்ப புதிதாக நேர்வெட்டுக் கால்வாய் அமைத்தல், ரூ.58 கோடியில் வேளச்சேரி ஏரி உபரி நீரினை பக்கிங்ஹாம் கால்வாய்க்கு திருப்ப புதிதாக இணைப்புக் கால்வாய் அமைத்தல் என 10 பணிகள் ரூ.633 கோடியில் நடந்து வருகின்றன.

÷இதில் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயினை ஒக்கியம் மடுவு முதல் முட்டுக்காடு வரை மேம்படுத்தும் பணி ரூ.78 கோடியில் நடந்து வருகிறது. சுமார் 13.5 கிலோ மீட்டர் தொலைவு வரையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

÷25 மீட்டர் அகலம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயினை 100 மீட்டர் அகலத்தில் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

கால்வாய் ஓரத்தில் சேவை வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன.

÷மழை காலங்களில் கால்வாய்களில் ஓடும் உபரி நீரை, பெரிய கால்வாய்களில் இணைத்து கடலில் கொண்டு விடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன்பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.

÷மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிட வழிவகை ஏற்படும். இதற்காகப் புதிய வடிகால்களை அமைத்தும், ஏற்கெனவே உள்ள வடிகால்களை சீரமைத்தும் வருகிறோம் என்று தெரிவித்தனர்.