Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

Print PDF

தினமணி 30.07.2010

கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

காஞ்சிபுரம், ஜூலை 29: நான்கு குடியிருப்புகள் மற்றும் 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

÷இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சு.சிவராசு வெளியிட்ட அறிக்கை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 2010-11-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகளில் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டது.

÷அதன்படி, நான்கு குடியிருப்புகள் அல்லது 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம். இக் கட்டங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களை கொண்ட கட்டடமாக இருக்க வேண்டும்.

÷மேலும் 2000 சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடம் ஆகியவற்றுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் திட்ட அனுமதி வழங்கலாம் என்றார்.