Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டிட உரிமப்பத்திரம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் யோசனை

Print PDF

தினகரன் 30.07.2010

கட்டிட உரிமப்பத்திரம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் யோசனை

பெங்களூர், ஜூலை 30: பெங்களூர் மாநகரிலுள்ள கட்டிடங்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் உரிமை மீண்டும் மாநகராட்சி வழங்க வேண்டும் என்று பெங்களூர் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெங்களூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் எழுந்து பேசும்போது, மாநகரில் உள்ள கட்டிடங்களுக்கு உரிமை பத்திரம் வழங்கும் அதிகாரம் பெங்களூர் பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் (பி.டி.) ஒப்படைக்கப்பட்டது. பி.டி..விடம் உள்ள அதிகாரத்தை மீண்டும் மாநகராட்சிக்கு கொண்டுவர வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பி.டி.ஏவிடம் அதிகாரம் வழங்கப்பட்ட சமயத்தில் 116 கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டியுள்ளதாக ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. கட்டிடஉரிமப் பத்திரம் வழங்க ரூ.18.75 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிட உரிமப்பத்திரம் வழங்கும் அதிகாரத்தை பி.டி..விடம் ஒப் படைத்து அரசு எடுத்து முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் சுப்ரமணியா அரசுக்கு 2009 ஏப்ரல் 1ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.ஆனால் ஆணை யரின் கடித்திற்கு அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு கட்சி பேதமின்றி அனைவரும் குரல் கொடுத்தனர்.

அப்போது ஆணையர் சித்தையா குறுக்கிட்டு, பி.டி. .விடம் உள்ள அதிகாரம் தற்போது மாநகராட்சியிடம் வந்துள்ளது. இனி இதில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி த¬ லவர் நாகராஜ். பி.டி..விடம் இருந்து இன்னும் முழுமையாக அதிகாரம் வரவில்லை. மேலும் பி.டி.. வசூல் செய்துள்ள நிதியை நமது மாநகராட்சிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய மேயர் நடராஜ், உரிமை பத்திரம் வழங்கும் அதிகாரம் பி.டி.ஏவுக்கு வழங்கி அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உறுதியளித்துள்ளார்.

இதுவரை பி.டி.ஏ வசூ 1398041963 செய்துள்ள நிதியை மாநகராட்சிக்கு திரும்ப பெறுவது தொடர்பாக அரசுடன் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.