தினகரன் 30.07.2010
அம்பத்தூர் பகுதிகளில் ஸி1 கோடியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு
ஆவடி, ஜூலை 30: அம்பத்தூர் நகராட்சியில் மழைநீர் கால்வாய்களை சீரமைக்க ஸி1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி தலைவர் கே.என்.சேகர் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அதன் தலைவர் கே.என்.சேகர் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் ஆஷிஷ்குமார், பொறியாளர் ரவி, சுகாதார அதிகாரி மணிமாறன், நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஜான் (அதிமுக):
நகராட்சி சுடுகாடுகள் பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும்.
பாலகுமரன் (திமுக):
நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சுடுகாடுகளிலும் மின்விளக்கு, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
மைக்கேல்ராஜ் (அதிமுக):
எஸ்வி நகர் விளையாட்டு திடலை பராமரித்து ஸ்டேடியம் அமைக்க வேண்டும்.
கோவிந்தராஜ் (பாமக):
கொரட்டூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சுறாகுப்பம் பகுதியில் விளையாட்டு திடல் மார்க்கெட் அமைக்க வேண்டும்.
தேவேந்திரகுமார் (அதிமுக):
கே.ஆர்.நகர் பூங்காவை சீரமைக்க வேண்டும். மழைகாலம் நெருங்கு வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வார வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இறுதியில், நகராட்சி தலைவர் கே.என்.சேகர் கூறியதாவது:
மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கால்வாய்களும் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. இதற்காக ஸி1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி சுடுகாடுகள் அனைத்தையும் சீரமைத்து, மதில்சுவர் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்க
ஸி46 லட்சம், சிறுபாலம் அமைக்க ஸி23 லட்சம், மழைநீர் கால்வாய் அமைக்க ஸி16 லட்சம், முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியில் உள்ள விளையாட்டு திடலை சீரமைக்க ஸி38 லட்சம், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ஸி4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.