Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலத்தை பயன்படுத்துவது பற்றி பெருநகர வளர்ச்சிக் குழு எடுக்கும் முடிவே இறுதி

Print PDF

தினகரன் 09.08.2010

நிலத்தை பயன்படுத்துவது பற்றி பெருநகர வளர்ச்சிக் குழு எடுக்கும் முடிவே இறுதி

புதுடெல்லி, ஆக.9: தெற்கு டெல்லி ஒல்கா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்காக 14.3 ஹெக்டேர் நிலம், தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை டெல்லி பெரு நகர வளர்ச்சிக் குழுமம் ஏற்கனவே வழங்கி விட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து சுற்றுச் சூழல் மற்றும் வன இலாகா, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 14.3 ஹெக்டேர் நிலம், சுற்றுச் சூழல், வன இலாகா , மாசு கட்டுப்பாடு வாரிய எல்லைக்குள் வருகிறது. எனவே அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதிக்கக் கூடாதுஎன்று கூறப்பட்டு இருந்தது.

அந்த மனு, நீதிபதி பி.டி. அகமது தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி அகமது அளித்த தீர்ப்பு வருமாறு:

டெல்லி நகரில் உள்ள நிலப்பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளானையும் மண்டல பிளானையும் பெரு நகர வளர்ச்சிக் குழுமம் தான் தயாரிக்கிறது. அந்த திட்டங்களை அமல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் முழு அதிகாரமும் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்துக்கு மட்டுமே உண்டு.எனவே தெக்காண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு உத்தரவில் நீதிபதி பி.டி. அகமது கூறியுள்ளார்.