தினமலர் 13.08.2010
நகராட்சி இடத்தை காட்டி "பிளாட்டு' க்கள் விற்பனைபோடி
: போடி நகராட்சி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ள பரமசிவன் கோயில் செல்லும் பாதையை, ரோடுக்கான பாதை என கூறி அருகே உள்ள நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருவதால், இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர இயலாது என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.நகராட்சி கமிஷனர் சரவணகுமார் கூறியதாவது: போடி சுப்புராஜ் நகர் - பரமசிவன் கோயில் செல்லும் மெயின் ரோட்டில் நகராட்சி குடிநீருக்கான பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.நகர் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி செய்திடும் வகையில் பழைய டி.எஸ்.பி., ஆபீஸ் - பரமசிவன் கோயிலுக்கு செல்லும் பாதையில் குடிநீருக்கான பெரிய அளவிலான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாதையை பொதுமக்கள், பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே நகராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது. இந்த அனுபவ பாதையை நகராட்சிக்கான ரோடு பாதை என கூறி சிலர் அருகே உள்ள நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். நகராட்சி அனுமதியின்றி இப்பகுதியில் வீட்டு மனைக்கான பிளாட் வாங்குபவர்களுக்கு எவ்வித சாக்கடை, ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர இயலாது என்றார்.