தினகரன் 24.08.2010
மாநகராட்சி எல்லை விரிவாக்கம் இறுதி வடிவமளிக்க ஆலோசனை ஆவணங்களை ஆணையாளர் சமர்ப்பித்தார்
மதுரை, ஆக. 24: மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் இறுதி வடிவம் அளிக்க துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஆணையாளர் செபாஸ்டின் ஆவணங்களை சமர்ப்பித்தார்.
மதுரை மாநகராட்சி எல்லையை 200 ச.கி.மீ. அளவிற்கு விரிவாக்கம் செய்ய சென்னையில் நேற்று நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் அசோக்வரதன்ஷெட்டி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர். உத்தேச விரிவாக்க எல்லை குறித்து ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை ஆணையாளர் சமர்பித்தார். இதில் இறுதி வடிவம் அளிக்க ஆலோசிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மாநகராட்சி மன்றத்தின் ஒப்பதலுக்கு வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ஐகோர்ட்டு கிளை அமைந்துள்ள பகுதி, சர்வதேச விமான நிலையம் அமையும் பகுதிகளை மாநகராட்சி எல்லைக் குள் சேர்க்க அந்த துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.