Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளூர் திட்டக் குழுமம்: பொதுமக்களிடம் இன்று குறை கேட்பு

Print PDF

தினமணி 28.09.2010

உள்ளூர் திட்டக் குழுமம்: பொதுமக்களிடம் இன்று குறை கேட்பு

தூத்துக்குடி, செப். 27: தூத்துக்குடியில் உள்ளூர் திட்டக் குழுமம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை, மாநில நகர் ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் செவ்வாய்க்கிழமை (செப்.28) கேட்டறிகிறார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நகர் ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளூர் திட்டக் குழுமம் தொடர்பான குறைகளை கேட்க பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

எனவே, பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் எண். 51, மேலரத வீதி, வி.ஜி.எஸ். பள்ளிக்கு எதிர்புறம் அமைந்துள்ள தூத்துக்குடி உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை நகர் ஊரமைப்பு இயக்குநரிடம் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.