தினகரன் 08.10.2010
சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த 1800 பேருக்கு நோட்டீஸ்
புனே,அக்.8: சாலை கட்டுமான பணிக்கு நிலம் கையகப்படுத்த பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மாநகராட்சி நிர்வாகம் 1800 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காலேவாடியில் உள்ள எம்.எம்.பள்ளியில் இருந்து பாவனா ஆறு வரை மாநகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே நில உரிமையாளர்கள் 1800 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலம் உடனடிதேவையாக இருப்பதால் அவற்றை வரும் 20ம் தேதிக்குள் நிலம் கையகப்படுத்தும் துறை, தேவைப்படும் நிலத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இருக்கிறது.
அதன் பிறகு நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்தும், சாலை கட்டுமானத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலம் எவ்வளவு என்பது குறித்தும் 27ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றும் நிலம் கையகப்படுத்துவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜி.நாலே தெரிவித்துள்ளார். புதிய அந்த சாலை அமையும் இடத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரை கிலோமீட்டருக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது