தினகரன் 22.10.2010
மழைநீரை சேமியுங்கள் குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னை, அக். 22: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் நிலத்தடி நீரின் அளவும் அதன் தரமும் உயர்ந்துள்ளது. கிணறுகளில் நீர் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற பயனை தொடர்ந்து பெறுவதற்கு பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே பராமரித்து வைக்க வேண்டும்.
மணல், கூழாங்கற்கள், கருங்கற்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த தொட்டிகளில் நிரப்ப வேண்டும்.
மழைநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை சரி செய்ய வேண்டும். மழைநீர் சேகரிப்பு குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால், வாரிய அதிகாரிகளை அணுகலாம்.