Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டட அனுமதி பெற புதிய உத்தரவு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தகவல்

Print PDF

தினகரன்               28.10.2010

கட்டட அனுமதி பெற புதிய உத்தரவு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தகவல்

கோவை, அக். 28: மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கட்டட வரைவு அனுமதி இனி வழங்கப்படமாட்டாது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது;

கோவை மாநகராட்சி கட்டட வரைவு அனுமதி, லே அவுட் அனுமதி போன்றவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை பல் வேறு நிர்வாக காரணங்களி னால் மாற்றப்பட்டுள்ளது. இனி, வீடு, வணிக கட்டடங்கள் கட்டட வரைவு அனு மதி பெற மாநகராட்சியின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டல அலுவலகங்களுக்கு செல்லவேண்டியதில்லை. பிரதான அலுவலகத் தில் ஆன்லைனில்விண்ணப்பித்தால் போதும்.

ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும். ஆன்லைனில் பிரதான அலுவலகத்திற்கு கட்டட வரைவு பெற விண்ணப்பிக்கும் விவரங்களை சுற்றறிக்கை மூலம் நகரமைப்பு பிரிவு மற்றும் மாநகராட்சி உரிமம் பெற்ற சர்வேயர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரிரு நாளில், பிரதான அலுவலகத்தில் கட்டட வரைவு அனுமதிக்கான விண்ணப்பம் பெறும் திட்டம் துவக்கப்படும். விரைவாக கட்டட வரைவு அனுமதி வழங்க அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் வரி வசூல் வேகமாக நடக்கிறது. இதுவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வரி தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலி க்க, 28 பில் கலெக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இது தவிர, 28 கையடக்க ரசீது வழங்கும் கருவி பெறப்படும். இந்த கருவிகளுடன் பில் கலெக்டர்கள் வரி வசூலிக்க வருவார்கள். பணம் பெற்று உடனடியாக ரசீது வழங்குவார்கள். எந்த பகுதியிலும் வரி வசூல் தாமதம் இருக்காது. 72 வார்டுகளுக்கும் ஒரு கைய டக்க ரசீது வழங்கும் கருவி வழ ங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சியில் வரி வசூல் வேகமாக நடக்கிறது. இதுவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வரி தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலி க்க, 28 பில் கலெக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இது தவிர, 28 கையடக்க ரசீது வழங்கும் கருவி பெறப்படும். இந்த கருவிகளுடன் பில் கலெக்டர்கள் வரி வசூலிக்க வருவார்கள். பணம் பெற்று உடனடியாக ரசீது வழங்குவார்கள். எந்த பகுதியிலும் வரி வசூல் தாமதம் இருக்காது. 72 வார்டுகளுக்கும் ஒரு கைய டக்க ரசீது வழங்கும் கருவி வழ ங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.