Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் கட்டடம் கட்ட நிபந்தனைகள் தளர்வு மேயர் சுப்பிரமணியன் விளக்கம்

Print PDF

தினகரன்                  29.10.2010

நெல்லை மாநகராட்சியில் கட்டடம் கட்ட நிபந்தனைகள் தளர்வு மேயர் சுப்பிரமணியன் விளக்கம்

நெல்லை, அக். 29: நெல்லை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சியில் புதிய கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட 18 நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என்று மண்டல தலைவர்கள், உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மேயர், பாளை, நெல்லை மற்றும் தச்சநல்லூர் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதித்தனர்.

அதன்படி பொதுமக்கள் நலன் கருதி அனுமதி பெற்ற மனைப்பிரிவுகளுக்கு தாசில்தாரிடமிருந்து தடையின்மை சான்று, விஏஓ அட்டெஸ்ட் எப்எம்பி, விஏஓ அட்டெஸ்ட் சிட்டா அடங்கல் மற்றும் விஏஓ அட்டெஸ்ட் டவுன் சர்வே ஸ்கெட்ச் போன்றவை மனுவோடு சமர்ப்பிக்க தேவையில்லை. மனுவோடு நில உரிமைக்குரிய ஆவணத்தின் நகலில் மனுதாரர் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட வேண்டும். அதில் நோட்டரி அட்வகேட் கையெழுத்து பெற வேண் டிய அவசியம் இல்லை.

கட்டட இடம் குறித்து தாவா இருந்தால் மட்டும் மனுதார் அரசு வக்கீலிடம் கருத்துரு பெற்று தர வேண் டும். மற்றும் விதிமுறைகள்படி சூரிய அடுப்பு 1500 .அடி மேலுள்ள கட்டடத்திற்கு வரைபடத்தில் காட்டப்பட வேண்டும். புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்ற 1,2,3,4,8,9,10,19,26,27 மற்றும் 31,32 பாகம் ஆகிய இடங்களில் புதியதாக வீடு கட்ட மனு செய்பவர்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சம்மத கடிதம் தர வேண்டும். அதற்குரிய வைப்பு தொகையும் செலுத்த வேண்டும்.

எனவே கட்டடம் கட்ட விரும்புபவர்கள் திங்கள்கிழமை தோறும் மேயரிடம் நேரில் கட்டட வரைபடத்திற்கான மனு, ஆவணங் களை தந்து 24 மணி நேரத்திற்குள் அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு வரி விதிப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் அடிக்கடி எழுப்பப் பட்டது. எனவே சென்ற மாதம் முதல் புதியதாக கட்டிடம் கட்டியதும் கட்டட உரிமையாளர்கள் உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மைய அலுவலகத்தில் சமர்பித்து உடனடி வரிவிதிப்பு ஆணை பெறலாம். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அதை சரிபார்த்து அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்குரிய அதிக பணத்தை வரியாக விதிப்பார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.