தினகரன் 08.11.2010
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் கட்டிட அனுமதி வழங்கப்படாது நகராட்சி ஆணையர் தகவல்
பெரம்பலூர், நவ. 8: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் எவ்வித மனை ஒப்புதல், கட்டிட அனுமதி வழங்கப்படாது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
பெரம்பலூரில் கட்டு மான பொறியாளர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நடந்தது. நகரமைப்பு ஆய்வர் மருதுபாண்டியன், நிலஅளவையர் ஜெய ராமன் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமை வகித்து பேசியதாவது:
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண் ணப்பிக்கும்போது காலி மனை ரசீது, நடப்பாண்டு வீட்டுவரி ரசீது, பத்திரநகல், பட்டா நகல், சர்வே வரை படம், சர்வே ‘ஏ‘ பதிவேடு நகல், புள்ளியியல் படிவம், 13 வருடம் வில்லங்க சான்றிதழ், வரைபடங்கள் 5, தமிழ்நாடு கட்டிட தொழிலா ளர் நல நிதிக்கான டிமாண்டு டிராப்ட் ஆகிய ஆவணங் கள் இணைக்க வேண்டும். மனுதாரர் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளில் அடங்கும் மனைகள், பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் அணுகுசாலை உள்ள இடங்களில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் எவ்வித மனை ஒப்புதல், கட்டிட அனுமதி வழங்கப்படாது. 4,000 சதுர அடிக்கு மிகாமல் தரை மற்றும் 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 2,000 சதுர அடியில் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட வணிக வளாகத்துக்கு மனுதாரர் விண்ணப்பித்தால் கட்டிட விதிகளுக்குட்பட்டிருந்தால் கட்டிட அனுமதி வழங்கப்படும் என்றார்.
நகராட்சி வளர்ச்சிப்பணி, சுகாதாரப்பணி, நகர் புனரமைப்பு, நகராட்சி எல்லைக்குட்பட்ட மனைகளின் வரன்முறை படுத்துதல், புதிய கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஆலோசனை செய்யப்பட் டது. பெரம்பலூர் கட்டு மான பொறியாளர் சங்கத்தலைவர் கலைநாதன், செய லாளர் ஜோதிவேல், பொரு ளாளர் விஜயபாபு கலந்து கொண்டனர்.