Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் 3 ஆண்டுகளில் 27 கட்டிடங்களுக்கு "சீல்" வைப்பு: 6,500 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்; விதியை மீறி கட்டியதால் நடவடிக்கை

Print PDF

மாலை மலர்                   10.12.2010

சென்னையில் 3 ஆண்டுகளில் 27 கட்டிடங்களுக்கு "சீல்" வைப்பு: 6,500 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்; விதியை மீறி கட்டியதால் நடவடிக்கை

சென்னை, டிச. 10- சென்னையில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27-7-2007-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை பாதுகாக்க அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன் பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆயிரத்த 816 வீடுகள், 698 வணிக நிறுவனங்கள், 20 நிறுவனங்கள், 66 தொழிற்சாலைகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் பெரும்பாலான கட்டிடங்களில் அனுமதி பெற்றதைவிட கூடுதலாக மாடிகள் கட்டியது, கூடுதல் பரப்பளவில் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யாததது உள்பட பல முறைகேடுகள் செய்துள்ளனர்.

இதில் 27 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 6 ஆயிரத்து 438 கட்டிடங்களின் பணிகளை நிறுத்தும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறித்த காலக்கெடு முடிந்த 4,161 கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கைகள் இருந்தும் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு பல்வேறு தலையீடுகள் காரணமாக உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 10 ஆயிரத்து 600 கட்டிடங்கள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ளது. அவைகள் மீதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.