Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் மீது அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன்        16.12.2010

விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் மீது அதிரடி நடவடிக்கை

கோவை, டிச.16: கோவையில் விதிமுறை கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகங்களில் அதிரடி ஆய்வு நடத்த நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று உத்தரவிட்டார்.


நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று, கோவையிலுள்ள உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறை கேட்டார். பின்னர், அவர் நிருபர்களி டம் கூறியதாவது:

கோவையின் வரைவு மாஸ்டர் பிளான் ஏற்கனவே அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது எந்தநேரத்திலும் வெளியா கும். வெளியான 60 நாளில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, திருத்தம் செய்து, இறுதி மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்.

தற்போது கோவையில் உள்ளூர் திட்டக்குழும பரப்பளவு 1 லட்சத்து 27 ஆயிர த்து 601 ஹெக்டேராக உள்ளது. கோவை மாநகராட்சியில் அருகிலுள்ள ஊராட்சிகள் மற்றும் குனியமுத்தூர், குறிச்சி நகராட்சிகள் இணைக் கப்பட்டுள்ளன.

இதனால் உள்ளூர் திட்டக்குழும பரப்பளவு 1 லட் சத்து 90 ஆயிரத்து 386 ஹெக் டேராக அதிகரிக்கும். அவை புதிய பிளான் வெளியிடும் போது சேர்க்கப்படவுள்ளது.

மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் செய்ய வேண்டிய திட்டங் கள் குறித்து ஆய்வு செய்ய மண்டல நகரமைப்புத்துறை துணை இயக்குனர் தலை மையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்.

கோவை மாநகரில் பல அடுக்குமாடி வணிக வளாகங்கள் விதிகளை மீறி கட்டியுள்ளனர். பல கட்டடங்க ளில் பார்க்கிங் வசதி இல்லை.

அவற்றை மண்டல இயக்குனர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட வரை படம் மூலம் ஆய்வு செய்து அதன் பட்டியல் தயாரிக்கப்படும். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளை பெயரில் கல்வி நிறுவனங்களைத் துவக்கி சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுகின்றனர்.

அத்தகைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற வேண் டும்.
தமிழகத்தில் 9 உள்ளூர் திட்டக்குழும அலுவலகங்களுக்கு பிரத்யேக இணைய தள வசதி செய்து தரப்படவுள்ளது.

ஆய்வு நடத்த அதிகாரி உத்தரவு

கோவை உள்ளுர் திட்டகுழுமம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று உள்ளுர் திட்ட குழுமம் தொடர்பாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.