தினகரன் 27.01.2011
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு
புதுடெல்லி, ஜன.27:
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன.
டெல்லி லட்சுமி நகர் லலிதாபார்க்கில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட ஒரு 5 மாடிக்கட்டிடம் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி இடிந்து 71 பேர் பலியாயினர்.
மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நகரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பலவீனமான கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் அனுமதி வாங்கி கட்டிய கட்டிடங்களின் சில பகுதிகள் அனுமதியை மீறி கட்டப்பட்டு இருந்தன.
அந்த பகுதிகளையும் இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி நஜாப்கர் மண்டலத்தில் 7, மத்திய மண்டலத்தில் 5 மற்றும் ரோகினி மண்டலத்தில் ஒரு கட்டிடடத்தில் கட்டப்பட்ட சில பகுதிகள் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன் தினம் இடித்து தள்ளினர்