Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

Print PDF
தினமணி                    08.03.2013

2 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

சென்னை, புரசைவாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டு வந்த இரு வேறு கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 7) சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியது: புரசைவாக்கம், மூகாத்தம்மாள் தெரு, எண்.39 என்ற முகவரியில் தரைத்தளம் மற்றும் 4 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ தரப்பில் திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக 4 தளங்களும் கட்டப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அது குறித்து கட்டட உரிமையாளருக்கு கடந்த பிப்.8-ம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டது. அறிவிக்கை கிடைத்த பின்னரும் கட்டடத்தை விதிகளின்படி மாற்றியமைக்காததால் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அக்கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளனர். அதே போல், பெரும்பாக்கம் பிரதான சாலை, வி.ஜி.பி.நகர், எண்-3, என்ற முகவரியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்ட வணிகக் கட்டடம் கட்ட திட்ட அனுமதி வழங்கப்பட்டது. திட்ட அனுமதிக்கு முரணாக 3 தளங்கள் கட்டப்பட்டு வந்ததால், அதை மாற்றியமைக்குமாறு கட்டடத்தின் உரிமையாளருக்கு கடந்த பிப்.6-ம் தேதி அறிவிக்கை அனுப்பட்டது. அறிவிக்கை கிடைத்த பின்னரும் விதிகளின்படி கட்டடம் மாற்றி அமைக்கப்படாததால் அக்கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
Last Updated on Friday, 08 March 2013 10:12