Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருங்குடியில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்

Print PDF
தினமணி        26.04.2013

பெருங்குடியில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்


பெருங்குடி பகுதியில் விதி மீறிக் கட்டப்பட்டு வந்த கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருங்குடி தொழிற்பேட்டை, ராஜீவ் காந்தி சாலை, சீவரம் கிராமம் மனை எண் 18-சி என்ற முகவரியில் வாகன நிறுத்தும் தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்ட ஆட்டோ மொபைல் மின்னணு உதிரிப் பாகங்கள் பராமரிப்பு நிறுவனம் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக 3-வது தளம் வணிகப் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு அதன் உரிமையாளருக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டது.

அறிவிக்கை கிடைத்த பின்னரும் விதிகளின்படி மாற்றி அமைக்கப்படாததால் அந்தக் கட்டடத்தின் 3-வது தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.