தினமலர் 29.04.2013
கோவையில் 15 வணிக வளாகங்களுக்கு சீல்
கோவை: கோவையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 15 வணிக வளாகங்களுக்கு சீல்
வைக்கப்பட்டது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வணிக வளாகம்
ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பலியானார்கள். இதனையடுத்து
அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில்
அதிகாரிகள் இறங்கினர். முதல் கட்ட சோதனையில் கோவையில் 55 வணிக வளாகங்கள்
அனுமதியின்றி கட்டப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை
12 வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கப்பட்டது. இன்றும் வணிக வளாகங்கள் சீல்
வைக்கும் பணி தொடர்ந்தது. அவினாசி ரோடு, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம்
பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 15 வணிக வளாகங்களுக்கு சீல்
வைக்கப்பட்டது. தொடர்ந்து சீல் வைக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள்
தெரிவித்தனர். எஞ்சியுள்ள வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் பணி அடுத்த
வாரத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.