தினமணி 4.11.2009
தாம்பரத்தில் விதிமீறிய கட்டடம் சீல் வைப்பு
சென்னை, அக். 3: சென்னை தாம்பரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிகவளாகத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும எல்லைக்குள் 2007 ஜூலைக்கு பிறகு கட்டப்பட்ட கட்டடங்களில் விதிமீறல் தொடர்பாக வந்த புகார்களின் மீது சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விதிமீறல் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து முதல்கட்ட நடவடிக்கையாக அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக இந்த கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.
செüகார்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பல கட்டடங்களுக்கும், தியாகராய நகரில் பிரபல வணிக வளாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தாம்பரம் கடப்பேரி பகுதியில் பவுண்ட் தெருவில் உள்ள தரைதளத்துடன் 3 மாடிகள் வரை கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.