தினமலர் 07.01.2010
காவேரிப்பாக்கம் பள்ளியில் நகராட்சி ஆணையர் ஆய்வு
திண்டிவனம் : திண்டிவனம் காவேரிப் பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.திண்டிவனம் காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் வீசப்பட்டு கிடந்தார். இந்த பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி கவுன்சிலர்கள் ஜெயராஜ், அன்பழகன் உட்பட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் முருகேசன், இப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். நகராட்சி பொறியாளர் பரமசிவம், இளநிலை பொறியாளர் பவுல் செல் வம் உடன் சென்றனர்.