தினமணி 14.02.2010
ரூ. 18 கோடி மதிப்பிலான 68 கட்டடங்கள்: 18-ம் தேதி திறப்பு
சென்னை,பிப்.13: சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணித் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 68 கட்டடங்கள் பிப்ரவரி 18}ம் தேதி திறக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 27 சத்துணவுக் கூடங்கள், 8 உடற்பயிற்சிக் கூடங்கள், 4 புதிய பூங்காக்கள், 9 மருந்தகங்கள், 5 பள்ளி கட்டடங்கள், 6 பல்நோக்கு கட்டடங்கள், 4 சமையல் கூடங்கள், ஒரு குப்பை மாற்று நிலையம், விளையாட்டுத் திடல், சுகாதார மையம், 2 திறந்தவெளி அரங்கங்கள் மற்றும் தியாகராய நகரில் பனகல் பூங்கா மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் ரூ. 18 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பிப்ரவரி 18}ம் தேதி திறக்கப்பட உள்ளன. சென்னையில் 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்.