தினமலர் 22.04.2010
மழைநீர் சேகரிப்பு கருத்தரங்க நிகழ்ச்சி
விழுப்புரம் : மாநில நீர்வளம் சுற்றுச்சூழல் மேம்பாட்டு மையம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத் தரங்கம் விழுப்புரத் தில் நடந்தது.விழுப்புரம் வி.ஆர். பி.,மேல்நிலைப் பள்ளி யில் நடந்த கருத்தரங் கிற்கு மைய நிறுவனர் தேவராஜ் தலைமை தாங்கினார். நீர்வள அமைப்பு துணைத் தலைவர் துரை கருணா நிதி வரவேற்றார். மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் கரைகளை உயர்த்தி மழைநீரை சேகரித்தல், பழ மரங் களை வளர்ப்பது மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற் றின் மூலம் கிராமப்புற மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டது.நிலத்தடி நீர் சேகரித் தல், வேலைவாய்ப்பை பெருக்குதல் ஆகிய பணிகளில் அரசின் ஒத் துழைப்புடன் ஈடுபடுவது குறித்தும் விவாதிக்கப்பட் டது. தமிழ்நாடு வடிகால் வாரிய பொறியாளர் அமிர் தலிங்கம், அறி வியல் இயக்க மாவட்ட தலைவர் வீரபாஸ்கரன், சமூகநல அமைப்புகளின் கூட்ட மைப்பு மாவட்ட செய லாளர் பாபு செல்வதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜோதி நன்றி கூறினார்.