Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

சார்கோப்&மான்கூர்டு இடையே சுரங்கப் பாதை மெட்ரோ வேண்டும்

Print PDF

தினகரன்                         11.11.2010

சார்கோப்&மான்கூர்டு இடையே சுரங்கப் பாதை மெட்ரோ வேண்டும்

மும்பை, நவ. 11: சார்கோப்& மான்கூர்டு இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் தடம் அமைக்க வேண்டும் என மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்திடம் (எம்எம்ஆர்டிஏ), மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மும்பையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 மக்கள் நல அமைப்புகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. மேம்பாலம் கட்டி மெட்ரோ அமைப்பதை விட்டு சுரங்கப் பாதையில் மெட்ரோ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சார்கோப்&மான்கூர்டு இடையே, பாந்த்ரா வழியாக 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் தடம் அமைக்க எம்எம்ஆர்டிஏ திட்டமிட்டுள்ளது. இதற்குமக்கள் நல கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து கூட்டமைப்பு நிர்வா கிகளை அழைத்து பேச எம்எம்ஆர்டிஏ கமிஷனர் ரத்னாகர் கெய்க்வாட் முடிவு செய்தார்.

கடந்த செவ்வாய் கிழமை, ரத்னாகர் கெய்க்வாட் தலைமையில், மெட்ரோ திட்ட உயரதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர். மேம்பால மெட்ரோவுக்கு பதில் சுரங்கப் பாதை மெட்ரோ அமைக்க வேண்டும் என கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அதை எம்எம்ஆர்டிஏ அதிகாரிகள் ஏற்கவில்லை. கூட்டம் முடி ந்த பிறகு பேட்டி அளித்த கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான ஹன்செல் டிசோஸா கூறுகையில், ‘’சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய மாநகரங்களைவிட மும்பையில் மெட்ரோ அமைக்க அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை சிறிது கூடுதலாக ஒதுக்கீடு செய்து சுரங்கப் பாதையில் ஏன் மெட்ரோ தடம் அமைக்க கூடாது" என்றார்.

எம்எம்ஆர்டிஏ கமிஷனர் கூறுகையில், "மேம்பால மெட்ரோ திட்ட செலவைவிட சுரங்கப் பாதை மெட்ரோவுக்கு கூடுதலாக ரூ56,000 கோடி செலவாகும். ஒரு சில கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். அதை அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது" என்றார்.

 

சீர்காழி நகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்:ஆணையர்

Print PDF

தினமணி                   10.11.2010

சீர்காழி நகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்:ஆணையர்

சீர்காழி, நவ 9: சீர்காழி நகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என நகராட்சி ஆணையர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது:

சீர்காழி நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நகராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகிவரும் நகராட்சி, நகர ஊரமைப்பு துறை அனுமதியற்ற மனைப்பிரிவுகளான திட்டை ரோடு பகுதியில் உள்ள சன் சிட்டி நகர், பனங்காட்டாங்குடி சாலையில் உள்ள மதினா நகர், முத்து நகர், ஸ்ரீநகர் காலணி, ஸ்ரீ நகர் விஸ்தரிப்பு 1,2,3,4.திருக்கோலக்காவில் உள்ள யுனிவர்சல் நகர், புறவழிசாலையில் உள்ள ராஜீவ் நகர், கோவில்பத்து பகுதியில் உள்ள வி..பி நகர் மற்றும் ஜம்.ஜம் நகர், பனங்காட்டு தெரு சாலையில் உள்ள கதிர்வேல் நகர், நங்கநல தெருவில் உள்ள சீனிவாச நகர்,பெத்தடி தெரு அருகில் உள்ள தஸ்வினி நகர், விளந்திரசமுத்திரம் ஜெயின் நகர் அருகில் உள்ள தாய் நகர், தாடாளன் வடக்கு வீதியில் உள்ள தாய் நகர் ஆகிய மனைபிரிவுகளில் பொதுமக்கள் மனைகள் ஏதும் வாங்கி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில், மேற்படி நகராட்சி, நகர ஊரமைப்பு துறை அனுமதியற்ற மனைபிரிவுகளில் உள்ள மனைகளுக்கு நகராட்சியால் கட்டிட அனுமதி மறுக்கப்படுவதோடு, அடிப்படை வசதியான சாலை, குடிநீர், தெருவிளக்கு ஆகியன செய்யப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மனைப்பிரிவு உரிமையாளர்கள் மீது 1920-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 175,176,177 மற்றும் 313ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துகொள்வதோடு, பொதுமக்கள் அனுமதியற்ற மனைபிரிவுகளை புறக்கணித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

கட்டட அனுமதிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்: நகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி            10.11.2010

கட்டட அனுமதிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்: நகராட்சி ஆணையர்

பெரம்பலூர், நவ. 9: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் புதிய கட்டடம் கட்ட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் நகராட்சி ஆணையர் போ.வி. சுரேந்திரஷா.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிய கட்டடம் கட்ட விண்ணப்பிக்க காலிமனை ரசீது, நிகழாண்டுக்கான வீட்டு வரி ரசீது, பத்திர நகல், பட்டா நகல், சர்வே வரைபடம், சர்வே ஏ பதிவேடு நகல், புள்ளியியல் படிவம், 13 ஆண்டுக்கான வில்லங்கச் சான்றிதழ், வரைபடங்கள்-5, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல நிதிக்கான வரைவோலை, மனுதாரர் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளில் அடங்கும் மனைகள், அனுகு சாலை உள்ள இடங்களில், கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் எந்த வித மனை ஒப்புதல், கட்டட அனுமதி வழங்க முடியாது. 4 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் தரை, இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்புக் கட்டடங்கள், 2 ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் தரைதளம், முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்து, கட்டட விதிகளுக்கு உள்பட்டிருந்தால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 36 of 96