தினகரன் 04.11.2010
பெங்களூரில் சட்ட விதிகளை மீறும் தனியார் கட்டிடங்கள்
பெங்களூர், நவ. 4: தனியார் வணிக வளாகத்திற்கு முறைகேடாக மாநகராட்சி அனுமதியளித்துள்ளது என மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற 85 வாகனங்களும், அவர்களுக்கு 1225 செல்போனும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் முறையாக பணி செய்யாமல் முறைகேட்டிற்கு துணை போகின்றனர். குறிப்பாக மல்லேஸ்வரம் சம்பிகே சாலையில் உள்ள தனியார் வணிக வளாகமான மந்திரிமால் 100% சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தலைமை பொறியாளர் ரமேஷ் அறிக்கை அளித்துள்ளார்.
இது மட்டுமல்லாது மந்திரிமால் துவக்க விழாவில் முதல்வரும் கலந்து கொண்டார். துவக்க விழாவிற்கு செல்லும் முன் முதல்வர் அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பெங்களூரில் 27 மெட்ரோ ரயில் நிலைய ங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் சம்பிகே சாலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை மட்டும் மந்திரிமாலுடன் இணைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் நடவடி க்கை எடுக்கவில்லை என் றால் நாங்கள் மந்திரிமால் மற்றும் மாநகராட்சி முன் போராட்டம் நடத்துவோம் என்றார்.