Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

விழுப்புரத்தில் மழை நீரை வெளியேற்ற நிரந்தர திட்டம்

Print PDF

தினகரன் 17.09.2010

விழுப்புரத்தில் மழை நீரை வெளியேற்ற நிரந்தர திட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலைய பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற ஆய்வுப் பணிகள் நடந்தது. விழுப்புரம் பஸ் நிலையம், பெருந்திட்ட வளாகம் மற்றும் சுற்றியுள்ள சாலாமேடு, வழுதரெட்டி பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புகளில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனிசாமி ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையொட்டி டி.ஆர்.., வெங்கடாசலம் தலைமையில் தாசில்தார் சேதுராமன், நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் குணசேகரன், வழுதரெட்டி ஊராட்சித் தலைவர் ராயர் உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

புதிய பஸ் நிலையம், பெருந்திட்ட வளாகம் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழை நீரை, பஸ் நிலையம் எதிரே சென்ற பழைய ஏரி நீர் வரத்து வாய்க்கால் வழியாகத் தான் வெளியேற்ற முடியும், மற்ற வழிகள் மேடான பகுதிகள் என்பதால் மாற்று திட்டத்திற்கு வழியில்லை. சுதாகர் நகர் வழியாக சென்ற பழைய வாய்க்கால்கள் தூர்வாரி அதன் மூலம் மழை நீரை வெளியேற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மாற்று வழியாக திட்டம் நிறைவேற்ற வேண்டுமென வருவாய்த் துறையினர் மழுப்பினர். இதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வசதியை ஏற்படுத்தியாக வேண்டுமென டி.ஆர்.., கூறினார். சுதாகர் நகர் சாலையின் கீழ் பாதாள வாய்க்கால் அமைத்து மழை நீரை வெளி யேற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

கட்டுமான பணி தரம் குறைவு

Print PDF

தினமலர் 16.09.2010

கட்டுமான பணி தரம் குறைவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 12வது வார்டு பகுதியில் நடக்கும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணி தரமின்றி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 12வது வார்டு கட்டபொம்மன் நகர், மூர்த்தி நகர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணி தரமின்றி இருப்பதால், புதிய கால்வாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, சிதிலம் அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: கான்கிரீட் கலவை தயாரிக்க 18 சட்டி ஜல்லி, 12 சட்டி மணல், 1.5 சட்டி சிமென்ட் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. கால்வாயின் மேற்குப்புறம் மட்டுமே சிறிய ஜல்லியில் கான்கிரீட் கலவை தயாரித்து தரமாக பூசப்படுகிறது. இதனால், மழை, வெயிலுக்கு தாங்காமல் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பணியை தரமாக செய்து முடிக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மீண்டும் சிதிலம் அடைந்தால், இப்பகுதி மக்கள் மாநகராட்சி முன் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம், என்றனர்.

 

சாக்கடை கட்டும் திட்டத்தில் தொடரும் சுணக்கம்

Print PDF

தினமணி 15.09.2010

சாக்கடை கட்டும் திட்டத்தில் தொடரும் சுணக்கம்

திருப்பூர், செப். 14: திருப்பூர் மாநகராட்சியில் அண்மையில் வரைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில், ரூ 40 கோடி மதிப்பில் சாக்கடைக் கால்வாய் திட்டப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி மெதுவாக நடப்பதாகத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்திய கம்யூ., மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் இருந்த வீட்டுமனைகள் மாநில அரசு உத்தரவை அடுத்து குறைந்த கட்டணத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டன. அப்பகுதிகளில் சாக்கடைக் கால்வாய் கட்ட, அரசு ரூ 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இத் திட்டத்தை 2010 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற உத்தரவிட்டதை அடுத்து அதற்கான பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டன. இந்நிலையில், ரூ 40 கோடி திட்டப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு முடிவடைய 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போது பல பகுதிகளில் திட்டப்பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நடந்த திருப்பூர் மாநகராட்சிக் கூட்டத்திலும் ரூ 40 கோடி சாக்கடைக் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து இந்திய கம்யூ., உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அக் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், மாநகராட்சி- 21வது வார்டில் | 40 கோடி சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணிகள் வெகு மந்தமாக நடைபெறுகின்றன. இத் திட்டத்துக்காக அப்பகுதியில் தோ ண்டப்பட்ட குழியால் தற்போது மழைநீர் பெருக்கெடுத்து அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் தேங்குகிறது. பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பலமுறை தெரிவித்தும் தொடர்ந்து மெத்தனம் காட்டப்படுகிறது. இப் பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடைக் கால்வாய் கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேயர் க.செல்வராஜ் முன்னிலையில் அக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி பேசுகையில், அப் பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கான எல்லாவகைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்ற தெரிவித்தார். இதையடுத்து, இந்திய கம்யூ., மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

 


Page 45 of 96