Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ரிசர்வ் சைட் ஒதுக்காமல் மனைப்பிரிவு விற்பனைதாராபுரத்தில் அரசு விதி மீறல்

Print PDF

தினமலர் 09.09.2010

ரிசர்வ் சைட் ஒதுக்காமல் மனைப்பிரிவு விற்பனைதாராபுரத்தில் அரசு விதி மீறல்

தாராபுரம்: தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் புதிய லே-அவுட் பகுதிகளில் ரிசர்வ் சைட் ஒதுக்காமல் மனைப்பிரிவுகள் விற்கப்படுகின்றன. தாராபுரம் பகுதிகளில் காலி இடங்கள் இல்லை. வாடகை வீடுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இணையாக வீட்டு வாடகை எகிறியுள்ளது. இந்நிலையில், நகராட்சியின் எல்லைப்பகுதிகளான கவுண்டச்சிபுதூர், நஞ்சியம்பாளையம், கொளத்துப்பாளையம் ஊராட்சிகள் மற்றும் பழனி, உடுமலை, அலங்கியம் ரோடு பகுதிகளில் தற்போது புதிய லே-அவுட்டுகள் உருவாகி வருகின்றன.ஒரு ஏக்கர் நிலத்தை மனைப்பிரிவாக பிரிக்கும்போது, 10 சென்ட் இடத்தை பொது உபயோகத்துக்காக விட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது.

உரிமையாளர்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கும் புரோக்கர்கள், விவசாய நிலங்களை மனைப்பிரிவுகளாக மாற்றுகின்றனர். மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்ட பின், ஊராட்சி அனுமதி பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஐந்து ஏக்கரில் மனைப்பிரிவுகளாக பிரிக்க வேண்டுமெனில், 50 சென்ட் இடத்தை பொது உபயோகத்துக்கு எழுதித்தர வேண்டும். ஆனால், சில மனை பிரிவு உரிமையாளர்கள் ரிசர்வ் சைட் இடம் ஒதுக்காமல், அரசு விதிகளுக்கு மாறாக முழு இடத்தையும் விற்பனை செய்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகமோ, பத்திரப்பதிவு அதிகாரிகளோ இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் பத்திரப்பதிவு செய்து கொடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக மனைப்பிரிவுகள் விற்பனையாகும் தாராபுரம் தாலுகா பகுதியில், புதிய மனைப்பிரிவுகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, ரிசர்வ் சைட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து பத்திரப்பதிவு அலுவலருக்கு பத்திரப்பதிவு செய்ய பரிந்துரைக்க வேண்டும்.

 

வேலூர் மாநகராட்சி எல்லை மறுவரையறை ஆற்காடு & வாலாஜா விடுவிப்பு

Print PDF

தினகரன் 09.09.2010

வேலூர் மாநகராட்சி எல்லை மறுவரையறை ஆற்காடு & வாலாஜா விடுவிப்பு

வேலூர், செப்.9: ஆற்காடு, வாலாஜா மற்றும் பெரும்பாலான ஊராட்சிகளை விடுவித்து வேலூர் மாநகராட்சியின் எல்லைகளை குறைத்து வரையறை செய்ய இன்று அவசரக்கூட்டம் நடக்கிறது.

வேலூர் மாநகராட்சி அவசரக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கார்த்திகேயன் தலைமையில் நடக்கிறது.

வேலூர் நகரை சுற்றியுள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து மாநகராட்சி உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2008ம் ஆண்டு அரசு ஆணை வெளியிட்டு வேலூர் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்தது.

பின்னர் கடந்த மார்ச் மாதம் 75 உள்ளாட்சி அமைப்புகளை வேலூர் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியானது. அதன்படி மொத்த பரப்பளவு 383.842 .கி.மீ ஆக இருந்தது. இது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளிலேயே அதிக பரப்பளவுடன் கூடிய மாநகராட்சியாக உருவெடுத்தது.

இதில் 65 கிராம ஊராட்சிகள் அடங்கி உள்ளன. பெரிய அளவில் ஊராட்சிகளை இணைப்பதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நிதியுதவிகள் கிடைக்காமலும், விவசாய வளர்ச்சிக்குரிய திட்டங்கள் செயல்படுத்த முடியாமலும் போய்விடும். அவை வெகுதூரத்தில் அமைந்துள்ளதால் மாநகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வேலூர் மாநகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள சத்துவாச்சாரி மற்றும் தாராபடவேடு ஆகிய 3ம் நிலை நகராட்சிகள், சேண்பாக்கம், அல்லாபுரம், தொரப்பாடி, கழிஞ்சூர், காந்திநகர் மற்றும் காட்பாடி ஆகிய பேரூராட்சிகளுடன் 8 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியை விரிவுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் மாநகராட்சி எல்லை 84.715 .கி.மீ. பரப்பளவு கொண்டதாக மாறுகிறது. இதனால் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகள் விடுவிக்கப்படுகிறது.

எனவே 16 உள்ளாட்சி அமைப்புகளை மட்டும் வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கவும் மற்ற 59 உள்ளாட்சி அமைப்புகளை வேலூர் மாநகராட்சியில் இணைப்பதில் இருந்து நீக்கம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

கட்டட அனுமதியில் உள்ளாட்சிக்கு மேலும் அதிகாரங்கள்: ஆட்சியர்

Print PDF

தினமணி 08.09.2010

கட்டட அனுமதியில் உள்ளாட்சிக்கு மேலும் அதிகாரங்கள்: ஆட்சியர்

மதுரை, செப்.7: கட்டட அனுமதியில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது:

தமிழக சட்டப்ரேவையில் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் திட்டக் குழுமம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்புச் சட்டத்தின்கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும், அனைத்து விதிகளுக்கு உள்பட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் 1.6.2010 முதல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது:

நான்கு குடியிருப்புகளுக்குள் மற்றும் 4 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் 2 தளங்கள் கொண்ட தனித்த கட்டடம்.

2 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட தனித்த வணிகக் கட்டடம்.

உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட அனுமதி பெற்ற பின்னரே, மதுரை உள்ளூர் திட்டப் பகுதிக்கு உள்பட்ட உள்ளாட்சிகளால் கட்டட அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மதுரை உள்ளூர்த் திட்டப் பகுதிக்குள் மதுரை மாநகராட்சி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஆனையூர், அவனியாபுரம் நகராட்சிகள், பரவை, விளாங்குடி, ஹார்விபட்டி, திருநகர், சோழவந்தான் பேரூராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 179 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கும்.

 


Page 47 of 96