Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கட்டிட அனுமதிக்கு புதிய விதி : கட்டிட பட வரைவாளர் சங்கம் எதிர்ப்பு

Print PDF

தினமலர் 20.08.2010

கட்டிட அனுமதிக்கு புதிய விதி : கட்டிட பட வரைவாளர் சங்கம் எதிர்ப்பு

சேலம்: கட்டிட அனுமதி பெற அரசு தற்போது அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு அனுமதி பெற்ற கட்டிட பட வரைவாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழு உரிமம் பெற்ற கட்டிட பட வரைவாளர்களின் பொதுக்குழு கூட்டம், ஹோட்டல் லட்சுமி பிரகாஷில் நடந்தது.தலைவர் அங்கப்பன் தலைமை வகித்தார். ஆலோசகர் நடராஜ் முன்னிலை வகித்தார். சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் உள்ளூர் திட்டக்குழுமம் பகுதிக்குள் அமையும் பகுதிகளுக்கு மட்டும் தனியான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதியினை தமிழக அரசால் வெளியிட்டது. இவ்விதி அனுமதியற்ற மனைப்பிரிவை ஆதரிக்கவும், அனுமதியற்ற கட்டிடங்கள் பெருகுவதற்கு வழிவகை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில், நிலையில் உள்ள சாலைகள் ஏதேனும் ஒரு உள்ளாட்சியின் பராமரிப்பில் இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவின்படி சாலை அகலம் குறைந்தபட்சம் 30 அடி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உபயோகத்தில் உள்ள சாலைகள் 20 அடிக்கும் குறைவாகவே உள்ளது.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 23 அடி அகலம் கொண்ட சாலைகள் அமைத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசு வெளியிட்டுள்ள விதிமுறையில் 23 அடி அகலம் கொண்ட சாலைகள் அமைத்து அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

அனுமதி வழங்கப்படும் மனைப்பிரிவுகளில் பொது ஒதுக்கீட்டிற்கான இடம் (பூங்கா) ஒரே இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறையில் செயல்படுத்த முடியாத விதியாகும்.

தரைதளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட கட்டிடங்கள் அனைத்தும் சிறப்பு கட்டிட விதிகளின் கீழ் அமைகிறது. வணிகம், அடுக்குமாடி குடியிருப்பு போன்ற கட்டிடங்களுக்கு பக்க திறவிடம் கட்டிடத்தின் மொத்த உயரத்தில் நான்கில் ஒரு பங்கு இடம் விட வேண்டும். ஆனால் தங்கும் விடுதி, ஹோட்டல்கள், மருத்துவமனையை சுற்றி நான்கு புறத்திலும் 20 அடி அகலம் திறந்த வெளி விட வேண்டும் என்று தற்போதைய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று. இது போன்ற விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயலாளர் செந்தில்வேலவன், பொருளாளர் நந்தகுமார், பி.ஆர்.., பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கட்டிட விபத்து பலி 10 ஆனது தானேயில் அபாயகரமான நிலையில் 800 கட்டிடங்கள்

Print PDF

தினகரன் 19.08.2010

கட்டிட விபத்து பலி 10 ஆனது தானேயில் அபாயகரமான நிலையில் 800 கட்டிடங்கள்

தானே, ஆக. 19: தானேயில் இடிந்து விழும் அபாயகர மான நிலையில் 800 கட்டிடங்கள் இருப்பதாகவும் இந்த கட்டிடங்களில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருவ தாகவும் தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தானே மாவட்டம் கல்வாவில் நேற்று முன்தினம் மாலை சோனி புவன் என்ற 40 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண் ணிக்கை 10 ஆக அதிகரித் துள்ளது.

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த நாக் ராஜ் ராய்கர், ராஜேந்திர ராய்கர், ரகுநாத் ராய்கர், விமல் ராய்கர், கிரண் ராய்கர் ஆகிய 5 பேர் மற்றும் மனுநாத் பண்டாரி, மவுசமி சாஜன், வி.ஜி.ஷேக், சதீஷ் குருமாதா, குலாப் கேணி என அடையாளம் காணப் பட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் ஏதும் இல்லாததால் அந்த பகுதி யிலேயே தெருவோரத்தில் கூடாரம் அமைத்து தங்கியி ருக்கிறார்கள்.

மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு இதுவரை எந்த உதவியையும் செய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் இடிபாடு களை அகற்றும் பணி நடந்தது.

இந்த நிலையில், தானே யில் 800 கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாக தானே மாந கராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் பி.ஜி. பவார் நேற்று கூறுகையில், "அபாயகரமான நிலையில் மொத்தம் 800 கட்டிடங்கள் இருப்பதாக கண்டறிந்திருக் கிறோம். இந்த கட்டிடங்கள் மக்கள் வசிக்க லாயக்கான வையா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இந்த கட்டிடங் களில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர்" என்றார்.

தானே மாநகராட்சிக்குட் பட்ட பகுதியில் கல்வா, மும்ப்ரா ஆகியவை வருகின்றன. இந்த இரண்டு பகுதிகளில் மட்டும் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில்தான் அபாயகரமான கட்டிடங்கள் அதிகளவில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அபாயகரமானவை என கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மக்கள் வசிக்கும் அளவுக்கு பலமானவையா என்பதை பரிசோதித்து அறிய பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:40
 

விதிமுறை மீறி கட்டப்படும் வணிக வளாகங்கள்

Print PDF

தினமலர் 19.08.2010

விதிமுறை மீறி கட்டப்படும் வணிக வளாகங்கள்

சேலம்: வணிக வளாகங்கள் கட்டப்படும் போது, வாகன நிறுத்துமிடத்துக்கு தாராளமாக இடம் விடாமல் கட்டுவதால், ரோடுகளிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதனால், சேலத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இப்பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.சேலம் மாநகரில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். டூவீலர்களும், கார்களும் அதிகரித்துவிட்டன.

மாநகரில் முக்கியமான ரோடுகளில் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அனைத்து வணிக நிறுவனங்களும் முறையாக கட்டப்படுவதில்லை. ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் அவர்களுக்குண்டான பார்க்கிங் வசதி செய்து கொள்வதில்லை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுவே போக்குவரத்து பிரச்னைக்கு மூலகாரணமாக அமைகிறது.

பெரும் நகரங்களில் வணிக வளாகம் கட்டும் போது மாநகராட்சி மற்றும் நகரமைப்பு (டவுன் பிளானிங்) அலுவகத்தில் அனுமதி பெற்று, அவர்களுடைய வரைமுறைக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட வேண்டும் என்பது உயர் நீதிமன்ற உத்தரவு. ஆனால், பெரும்பாலான வணிக வளாகங்கள் வரைமுறைக்கு உட்பட்டு கட்டவில்லை. மாநகராட்சி நிர்வாகமோ இது போன்ற வணிக வளாகங்கள் முறையாக கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்வதில்லை. மாநகரில் 80 சதவீதம் வணிக வளாகங்களில் தற்பொழுது பார்க்கிங் வசதி கிடையாது.சேலம் நான்கு ரோட்டிலிருந்து, டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப், புது பஸ் ஸ்டாண்ட் ஐந்து ரோடு வரையிலும், அஸ்தம்பட்டியிலிருந்து, சாரதா காலேஜ் ரோடு, ஜங்ஷன் ரோடு வரையிலும், செரிரோடு, முள்ளுவாடி கேட், பழைய பஸ் ஸ்டாண்ட், குகை, பிரபாத், தாதகாப்பட்டி வரையிலும் இதுபோன்ற வணிக நிறுவனங்களின் முன் நிறுத்தப்படும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மாநிலத்தில் விபத்து இல்லாத பத்து நகரங்களில் சேலம் மாநகரும் தேர்வு செய்யப்பட்டு, மாநில அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. ஆனால், தினம் தினம் மாநகரில் விபத்துக்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீஸார் இல்லாதது மற்றும் கண்டபடி வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதும் தான். தற்பொழுது ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீஸார் பணியில் உள்ளனர். சில இடங்களில் மகளிர் போலீஸார் பணியில் உள்ளனர். அவர்கள் போக்குவரத்தை சீர்செய்ய சிரமப்படுகின்றனர்.மின்தடை பிரச்னை பல்வேறு தரப்பட்ட தொழில், மக்களை பாதிப்படைய செய்திருக்கும் வேளையில் போக்குவரத்து சிக்னலையும் விட்டு வைக்கவில்லை.

மாநகரில் மின்தடை அமலில் உள்ள நேரங்களில் அந்த பகுதியில் உள்ள சிக்னல்களும் இயங்குவதில்லை. இதனால் முக்கிய இடங்களில் வாகனங்கள் தாறுமாறாக சென்று கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.வரும் 20ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி சேலம் வர இருப்பதால், கட்சியினர் அவரை வரவேற்று பேனர், கட்-அவுட், அலங்கார வளைவுகள், கட்சி கொடிகள் கட்டி வருகின்றனர். அதனால் போக்குவரத்து மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மாநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மூன்று மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியது.மாவட்ட நிர்வாகம், சேலம் போலீஸ், மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, காலம் தாழ்த்தாமல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 19 August 2010 08:40
 


Page 53 of 96