Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்

Print PDF

தினமணி 30.06.2010

கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்

விருதுநகர், ஜூன் 29: புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளூர் குழுமம் மூலம் அனுமதி வழங்க கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ளாட்சிப் பகுதிகளில் அனைத்து விதிகளின்படி மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தமிழகத்தில் செனனை பெருநகர்ப் பகுதி நீங்கலாக, நான்கு குடியிருப்புகள் அல்லது மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இதன்படி, 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரு தளங்கள் கொண்ட கட்டடங்கள்.

2000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரைத் தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் உள்ளாட்சி அமைப்பு அளிக்கலாம்.

அதே சமயத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவில் எவ்வித மனை ஒப்புதல் அல்லது கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது.

மேற்படி, அதிகார வரம்புக்குள்பட்டு உள்ளாட்சி அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்ட அதே இடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பித்தால், அதற்கு குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்பு அனுமதி வழங்க இயலாது. அவ்வாறு தரும் விண்ணப்பங்களை உள்ளூர் திட்டக் குழும அலுவலகம் மற்றும் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஆட்சியர்.

Last Updated on Wednesday, 30 June 2010 11:49
 

நகராட்சியில் கட்டட அனுமதி பெற கூடுதல் செலவு : இன்ஜினியர்கள் அசோசியேஷன் அதிருப்தி

Print PDF

தினமலர் 30.06.2010

நகராட்சியில் கட்டட அனுமதி பெற கூடுதல் செலவு : இன்ஜினியர்கள் அசோசியேஷன் அதிருப்தி

பொள்ளாச்சி: "பொள்ளாச்சி நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வாங்குவதற்கு பெரும் தொகை செலவழிக்க வேண் டியதுள்ளது' என சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி தாலுகா சிவில் இன்ஜினியர்ஸ் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பொள் ளாச்சி நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி பெற முன்பணம் என்ற பெயரில், கட்டுமான பணிகள் நிறைவடையாமல், குடிநீர் இணைப்பிற்கும், பாதாள சாக்கடை திட்டத்திற்கும், காப்பு தொகைக்கும், மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கும் பணம் வசூலிக்கின்றனர். மேலும், நகராட்சியில் வசூலிக்கும் கட்டட உரிம கட்டணம், சேவை கட்டணம், அபிவிருத்தி கட்டணம் ஆகியவையும் உயர்த்தி வசூலிக்கின்றனர்.

கட்டண உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. கட்டட அனுமதி பெற்று வங்கியில் கடன் கொண்டு கட்டடம் கட்டும் மக்கள், அனுமதி பெறவே பெருந்தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது.ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியும், சுரங்க நடைபாதை கட்டும் பணியும் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலம் பணி மந்தமாக நடப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், ரோடு சரியில்லாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகி செல்லத்துரை நன்றி கூறினார்

 

நான்கு ஆயிரம் சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு திட்ட அனுமதி: ஊள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி

Print PDF

தினமலர் 30.06.2010

நான்கு ஆயிரம் சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு திட்ட அனுமதி: ஊள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி

விருதுநகர்: தமிழகத்தில் சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடியில் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. "மாஸ்டர் பிளான்' அறிவிக்கப்படாத பகுதிகளில் அமைந்துள்ள உள்ளாட்சிகளில், உள்ளூர் திட்டக்குழுமம், புதுநகர் வளர்ச்சிக்குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து அனுமதிகளும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்ட நகராட்சி கட்டடவிதி 1972, தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதி 1997 முழுமைத்திட்ட விதி, விரிவு அபிவிருத்தி திட்ட விதி மனைப்பிரிவு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்க வேண்டும். இதன்படி உள்ளாட்சிகளுக்கு, நான்கு குடியிருப்புகள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை தளம், இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள். 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம், மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் வழங்குதல். அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அதிகார வரம்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்பட்டால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருந்தாலும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது. இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலகத்திற்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.

 


Page 64 of 96