Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

பார்க்கிங் வசதியில்லாத கட்டடம் மீது கூட்டு நடவடிக்கை : உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர்     15.05.2010

பார்க்கிங் வசதியில்லாத கட்டடம் மீது கூட்டு நடவடிக்கை : உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு கலெக்டர் உத்தரவு

திருப்பூர் : 'பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக கட்டடங்கள் மீது மாநகராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் திட்டக் குழும அலுவலர்கள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும பகுதி விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் உள்ளூர் திட்டப்பகுதியில் ஏற்பட்டு வரும் அனுமதியற்ற கட்டுமானங்கள் குறித்தும், அதை தடை செய்ய உள் ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது. சட்டசபையில் அறிவித்தபடி, திருப்பூர் திட்டக் குழுமத்தின் எல்லையை விரிவாக்குவது குறித்து, கலெக்டர் மற்றும் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஆலோசித்தனர்.

கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:உள்ளாட்சி பகுதிகளில் வரைபடம் ஒப்புதல் கோரி பெறப்படும் அடுக்குமாடி கட்டடம், பொது கட்டடம், கல்விக்கூடங்கள், வணிக வளாகங்கள் குறித்த விண்ணப் பங்களை, உள்ளூர் திட்டக் குழும பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மாநகராட்சி பகுதியில் முதல்கட்ட மாக பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடு களில் வர்த்தக கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக கட்டடங்கள் மற்றும் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழும ஒப்புதல் பெறப்படாமல் அமைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்து மாநகராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியற்ற மனைப் பிரிவுகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.'அனுமதியற்ற மனைப்பிரிவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு வரைபடம் ஒப்புதல்; அதில் அமையும் கட்டடங்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்பட மாட்டாது; அனுமதியற்ற கட்டடத்தை கட்டட உரிமையாளர்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்' என அறிவிப்பு செய்ய வேண்டும்.

உள்ளூர் திட்டக்குழும பகுதிக்குள் அமையும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில், பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தலாம். இப்பகுதிகளில் இணைப்பு சாலை, சிறு பாலங்கள், பூங்காக்கள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் அமைக்க, உள் ளாட்சி அமைப்புகளின் பரிந்துரை யுடன், உள்ளூர் திட்டக்குழும நிதி உதவி பெறுவதற்காக, உத்தேச கருத்துருக்களை மாவட்ட நிர்வாகத் துக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஜீவானந்தம் கூறுகையில், ''முதல்கட்டமாக ஆலோசனை கூட்டம் போடப்பட்டுள்ளது. பகுதி வாரியாக பட்டியல் தயாரிக்கப்படும். படிப்படியாக அனைத்து விதிமுறை களும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமல்படுத்தப்படும்,'' என்றார்.

 

ரூ.47 கோடி செலவில் மழை நீர் கால்வாய்

Print PDF

தினமலர்      15.05.2010

ரூ.47 கோடி செலவில் மழை நீர் கால்வாய்

சென்னை: ''திருவல்லிக்கேணி பகுதியில் மத்திய பக்கிங் காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் 47 கோடி ரூபாய் செலவில் 35 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் கால்வாய் கட்டப் படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.

ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்பு திட்டத் தின் கீழ் 1,447 கோடியே 91 லட்ச ரூபாய் மதிப்பில் நகரில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியான திருவல்லிக்கேணி, மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: நகரில் மழைகாலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் வெள்ள தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கொளத்தூர் பகுதியில் 25 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் 20 கிலோ மீட்டர் நீளத்திலும், வடக்கு பக்கிங்காம் கால் வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் 20 கோடியே 50 லட்சம் மதிப்பில் 12.75 கி.மீ நீளத் திற்கும், வேளச்சேரி பகுதியில் 47 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் 32 கி.மீ நீளத்திலும் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

அதுபோல் மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்ப் பிடிப்பு பகுதியில் 47 கோடியே 17 லட்ச ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 33.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால் வாய் கட்டப்படும். இந்த திட்டத்தால் திருவல்லிக்கேணி, நுங்கம் பாக்கம், மற்றும் அடையாறு மண்டலங்களை சேர்ந்த 24 வார்டுகள் பயன்பெறும். அதோடு திருவல்லிக் கேணி பகுதியில் மத்திய பக்கிங்காம் கால்வாய் ஏழு கி.மீ., நீளத்திற்கு 62 கோடி ரூபாய் மதிப்பில் தூர் எடுத்து ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் வகை யில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற் கொள்ள உள்ளது.

இந்த பகுதியில் மட்டும் 115 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில் மழை வெள்ள தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை நகருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள் ளார். கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் 51 கோடி ரூபாய் மதிப்பில் கீழ் நிலை, மேல்நிலைத் தொட்டி கள் கட்டப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகிக் கும் குழாய்களின் மீது இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அகற்றப்பட்டு 21 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. இவ்வாறு மேயர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகர கமிஷனர் ராஜேஷ் லக் கானி, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, பணிகள் நிலைக் குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கவுன் சிலர்கள் பங்கேற்றனர்.

 

பேரூராட்சி பகுதிகளில் 1 மாத காலகெடுவிற்குள் பணி முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Print PDF

தினகரன்  18.05.2010

பேரூராட்சி பகுதிகளில் 1 மாத காலகெடுவிற்குள் பணி முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தர்மபுரி, மே 18: பேரூராட்சி பகுதிகளில் கூடுதலாக வழங்கப்படும் 1 மாத காலக்கெடுவிற்குள் பணியை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் அமுதா குறிப்பிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமுதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஆட்சியர் அமுதா பேசியதாவது:

பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு தலைப்பிலான திட்டப்பணிகள் மற்றும் பேரூராட்சியின் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை ஓப்பந்த விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள காலகெடுவிற்குள் முடிக்காத ஒப்பந்தாரர்களுக்கு பணியை முடிப்பதற்கு கூடுதலாக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கலாம்.

ஒருமாத காலகெடுவிற்குள் பணியை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டு ஒருவார காலகெடுவிற்குள் பணி முடிக்கப்படவில்லையெனில் தினமும் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படவேண்டும். மேலும் காலதாமதமாக பணிமுடிக்கும் ஒப்பந்த தாரர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில், தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ருக்குமணி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ் போஸ், இளநிலை பொறி யாளர் கிருபாகரன் மற்றும் தர்மபுரி மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்ட னர். ஆட்சியர் அறிவுறுத்தல்

 

 


Page 72 of 96