Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அனுமதியின்றி கட்டிய தனியார் ஓட்டல் கட்டடத்துக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 08.12.2009

 

தக்கலை தர்கா பள்ளி சாலையில் ரூ. 25 லட்சத்தில் மழைநீர் வடிகால்: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 27.11.2009

தக்கலை தர்கா பள்ளி சாலையில் ரூ. 25 லட்சத்தில் மழைநீர் வடிகால்: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

தக்கலை, நவ. 26: பத்மநாபபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தக்கலை தர்கா பள்ளி முன்பக்கமுள்ள சாலையில் இருபுறமும் ரூ. 25 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்க வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ரேவன்கில் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், துணைத் தலைவர் முகமது சலீம், ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சணல்குமார், சுகாதார அலுவலர் கிருஷ்ணன், மேலாளர் ஆதினம், உறுப்பினர்கள் விஜயகோபால், கொச்சுகிருஷ்ணபிள்ளை, முகமதுராபி, ரவிச்சந்திரன், பீனா, நாகராஜன், ரங்கசாமி, ரேணுகா உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினர் ஹரிகுமார் பேசும்போது, நகராட்சியில் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தலைவர் ரேவன்கில்: தற்போது குடிநீர் ஆற்றூர் பகுதியில் இருந்து வருகிறது. இதை குடிநீர் வடிகால்வாரியம்தான் பராமரிக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சியல் குடிநீர் சுத்தரிப்பு நிலையம் கட்ட மருந்துக்கோட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்ள்ளது. அங்கு குடிநீர் சுத்தரிப்பு நிலையம் அமைக்கத் தேவையான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

பத்மநாபபுரம் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து நகராட்சி சொத்துக்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது காவல் துறை, நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்மநாபபுரம் நகராட்சியின் வருமானத்தைப் பெருக்கும் பொருட்டு நகராட்சிப் பகுதியிலுள்ள செல்போன் டவர்களுக்கு சொத்துவரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சென்னையில் அனுமதியில்லாமல் கட்டிய 100 கட்டிடத்துக்கு "நோட்டீசு"

Print PDF

மாலை மலர் 24.11.2009

சென்னையில் அனுமதியில்லாமல் கட்டிய 100 கட்டிடத்துக்கு "நோட்டீசு"

சென்னை மாநகரத்தில் வீடுகள், வணிக நிறு வனங்கள், வியாபார கடைகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம். டி..) விதிமுறைகளை வகுத் துள்ளது. அதன்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.

ஆனால் சிலர் விதிமுறை களுக்கு மீறி அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டுவதை சி.எம்.டி.. தக்க நடவடிக்கை எடுத்து முறைப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் தியாகராய நகரில் விதிமுறையை மீறி கட்டிய ஒரு நிறுவனத்துக்கு "சீல்" வைக்கப்பட்டது. தாம்பரம் அருகே விதி முறைகளை மீறி கட்டிய வீடுகளுக்கும் சி.எம்.டி.. சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது.

இது போல தினமும் பல கட்டிடங்களை கண்டறிந்து "சீல்" வைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது சென்னை நகரில் விதிமுறை மீறி அனுமதி பெறாமல் கட் டப்பட்ட வீடுகள், வணிகப் பகுதிகளை சி.எம்.டி.. கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சி.எம்.டி.. மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது 100-க்கும் மேற் பட்ட கட்டிடங்கள் விதி முறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு உள்ளது. இதனால் இடிக்க முடியாத நிலை உள்ளதால் அதை பயன்படுத்த கூடாது என்பதற்காக பூட்டி சீல் வைத்து வருகிறோம். 100 கட்டிடங்களும் குடியிருப்பு மற்றும் வணிக பகுதியாகும். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Tuesday, 24 November 2009 11:25
 


Page 84 of 96