Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

பக்கிங்ஹாம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி முடிக்க அவகாசம்

Print PDF
தின மலர்                  27.02.2013

பக்கிங்ஹாம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி முடிக்க அவகாசம்


சென்னை:பக்கிங்ஹாம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க, ஜூன் மாதம் வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.மழைக்காலங்களில், சென்னை நகரம் வெள்ளத்தில் மிதப்பதை தடுக்கும் வகையில், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், 1,447 கோடி ரூபாயில், தேவையான இடங்களில், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகள் ஆகியவை, 2010ம் ஆண்டின் மத்தியில் துவங்கப்பட்டன.பொதுப்பணி துறை, 633 கோடி ரூபாயிலும், மாநகராட்சி, 814 கோடி ரூபாயிலும், இந்த பணிகளை மேற்கொண்டன.

இப்பணிகள், 2012ம் ஆண்டு, மத்தியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், பருவ மழைக்காலம் ஆகியவற்றால், குறித்த காலத்தில் முடிக்க முடியவில்லை என, ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.இதையேற்று, ஆறு மாத அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி, 2012ம் ஆண்டு இறுதியில், பணிகள் முடித்திருக்க வேண்டும். மத்திய பக்கிங்ஹாம் கால்வாய், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில், இதுவரை, 40 சதவீதம் கூட முடியவில்லை.இந்நிலையில், மழைநீர் கால்வாய் பணிகளை, இப்பகுதிகளில் முடிக்க, ஜூன் மாதம் வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துவங்கும் என்பதால், அதற்குள், மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 27 February 2013 09:57
 

சத்துணவுக் கூடங்களுக்கு ரூ.63 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF
தின மணி          23.02.2013

சத்துணவுக் கூடங்களுக்கு ரூ.63 லட்சத்தில் புதிய கட்டடம்

சின்னசேலம் ஒன்றியத்தில் 24 சத்துணவுக் கூடங்களுக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் புதிய சமையலறைக் கட்டடம் கட்டுவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ராதா முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ப.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டால் அதனை உடனே சீரமைக்க கவுன்சிலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் அனைத்து கவுன்சிலர்கள் பயிற்சியில் பங்கேற்று அரசு செயல் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது எனத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், 24 சத்துணவுக் கூடங்களுக்கு புதிய சமையலறைக் கட்டடம் கட்ட அரசு நிதியாக ரூ.51 லட்சத்து 50 ஆயிரம், ஒன்றிய நிதியாக ரூ.11 லட்சத்து 48 ஆயிரம் ஒதுக்கீடு செய்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனுவாசன், மாவட்டக் கவுன்சிலர் செல்லமுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Monday, 25 February 2013 11:42
 

ரூ.1,700 கோடியில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்னுற்பத்தி திட்டம்

Print PDF
தின மணி          23.02.2013

ரூ.1,700 கோடியில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்னுற்பத்தி திட்டம்

கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் ரூ.1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருவதாக கல்பாக்கம் அணு மின்நிலைய அணு விஞ்ஞானி பிரபாத்குமார் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறை சார்பில் தாவர எரிபொருளும், அதன் செயல்பாடுகளும் என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணு மின்நிலைய விஞ்ஞானி பிரபாத்குமார் பங்கேற்றுப் பேசுகையில், இந்தியா இயற்கை வளங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்தியாவின் ஆற்றல், தேவைகளை தமிழ்நாடு பல்வேறு வகையில் பூர்த்தி செய்கிறது. இன்றைய தேவைகளுக்கு அணுசக்தி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனைப் பூர்த்தி செய்ய அணுசக்தித் தொழில்நுட்பங்கள், அதன் மூலப்பொருள்கள் மிகவும் பயன்படுகிறது என்றார்.

துணைவேந்தர் எம்.ராமநாதன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் அணுசக்தி போன்ற மாற்று எரிசக்தி தேவை முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவித்தார்.

பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி, இயந்திரப் பொறியியல் துறைத்தலைவர் என்.கிருஷ்ணமோகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். ஒருங்கிணைப்பாளர் ச.சிவப்பிரகாசம் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் வி.மணிஇனியன் அறிமுகவுரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

பின்னர் விஞ்ஞானி பிரபாத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் ரூ.1700 கோடி செலவில் சோடியம் தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

இதில் 90 சதவீத பணி முடிவுற்றுள்ளது. விரைவில் அணு உலையானது முழுத்திறனுடன் இயக்கப்படும் போது சோடியம் தொழில்நுட்பப் பயன்பாடு வெற்றி அளிக்கும் என்றார்.
Last Updated on Monday, 25 February 2013 11:33
 


Page 21 of 96