Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மெட்ரோ ரயில் வழித்தட கட்டட விதிகள் தளர்வு :ஆய்வு பணிகளுக்கு தனியார் நிறுவனம் தேர்வு

Print PDF

தினமலர்      27.08.2012

மெட்ரோ ரயில் வழித்தட கட்டட விதிகள் தளர்வு :ஆய்வு பணிகளுக்கு தனியார் நிறுவனம் தேர்வு

சென்னை : சென்னையில், மெட்ரோ ரயில் வழித்தடத்தில், மக்கள் நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், கட்டடங்களுக்கான விதிகளை தளர்த்துவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான, ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் போக்குவரத்து மேம்பாட்டுக்காக, வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையம் வரையிலான, 23.1 கி.மீ., தூரத்துக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, பரங்கிமலை வரையிலான, 22 கி.மீ., என, மொத்தம், 45.1 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.விதிகள் தளர்வுஇப்பணிகள் முடியும் சூழலில், இந்த வழித்தடத்தையொட்டிய பகுதிகளில் மக்கள் குடியேறுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, மக்கள் அதிக அளவில் குடியேறுவதை ஊக்குவிக்கும் வகையில், இப்பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருபுறமும் குறிப்பிட்ட தூரம் வரையிலான இடங்களில், கட்டப்படும் கட்டடங்களுக்கு, பல்வேறு சலுகைகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, இந்த வழித்தடத்தின் இரு பக்கங்களிலும், புதிய குடியிருப்புகளுக்கான தளப்பரப்பு குறியீட்டின் அளவை அதிகரிப்பது, திட்ட அனுமதிக்கான நடைமுறையை எளிதாக்குவது போன்ற வகைகளில் விதிகள் தளர்த்தப்படும் என, நகரமைப்புத்துறை அறிவித்திருந்தது.
 
இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விதிகளை தளர்த்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தை (சி.எம்.டி.ஏ.,) நகரமைப்புத்துறை கேட்டுக்கொண்டது. இதன்படி முதல்கட்ட ஆய்வு களை மேற்கொண்டதில், மெட்ரோ ரயில் வழித்தடப் பகுதி முழுவதையும் ஆய்வு செய்தால்தான் ஒட்டுமொத்தமாக என்னென்ன சலுகைகள் வழங்க முடியும் என்பது தெரியவரும். இதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனை பணிகளுக்கு தனியார், பொறியியல் நிறுவனத்தை அமர்த்துவது என, முடிவு செய்யப்பட்டது.நிறுவனம் தேர்வுஒப்பந்தம் கோரும் பணிகள், சி.எம்.டி.ஏ., மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனம் (டுபிசெல்) மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், "எல் அண்டு டி கல்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக இந்நிறுவனத்துக்கு, 72 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனம் தன் பணிகளை முடித்து அறிக்கை அளிக்கும். அதன்பின், கட்டுமான விதிகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள்

Print PDF
தினகரன்    16.08.2012

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள்

கோவை, : வரன்முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் அரசின் உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.கோவை மாநகராட்சி 72 வார்டுகளுடன் 110 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது, குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் என 11 உள்ளாட்சி அமைப்பு இணைக்கப்பட்ட பிறகு, 100 வார்டுகளுடன் 257.04 சதுர கி.மீ பரப்பளவாக உயர்ந்துள்ளது.பழைய வார்டுகளில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் அபராத தொகையுடன் ஓரளவுக்கு வரன்முறைபடுத்திக்கொள்ளப்பட்டது.

ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட 11 உள்ளா ட்சி அமைப்புகளில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு ஏராளம் உள்ளன. குறிப்பாக, 10 ஏக்கரில் மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது 60 சதவீத நிலம் மட்டுமே மனைப்பிரிவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 40 சதவீத நிலம் தார்ச்சாலை, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு விடவேண்டும்.

ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 90 சதவீத மனைப்பிரிவுகள் விதிமுறை மீறல்களுடன் உள்ளன. இதுபற்றி கணக்கெடுக்க மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் கமிஷனர் பொன்னுசாமி ஆகியோர் டவுன் பிளானிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அவர்கள், கடந்த 6 மாத காலமாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். சமீபத்தில் கணக்கெடுப்பு பணியை நிறைவுசெய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், ‘‘இம்மனைப்பிரிவுகளிடமிருந்து அபராத தொகை பெற்று, முறைப்படுத்திக்கொண்டால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அத்துடன், இதர பகுதிகளைப்போல் இப்பகுதி மக்களுக்கும் தார்ச்சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளி ட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கலாம்‘‘ என குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி நகரமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:

பழைய 72 வார்டுகளில் 620க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 1,700க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு உள்ளன. இவற்றில், 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைப்படி இக்குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி எதுவும் செய்துகொடுக்க முடியாத நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற குடியிருப்புகளை அங்கீகாரம் செய்துகொள்வதற்கு வசதியாக தமிழக அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதற்கான உத்தரவு இதுவரை கோவை மாநகராட்சிக்கு வரவில்லை. அந்த உத்தரவை எதிர்பார்த்து இம்மனைப்பிரிவு மக்கள் காத்திருக்கின்றனர். உத்தரவு வந்த பிறகு தார்ச் சாலை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் முறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

மாநகராட்சிக்கு அதிகாரம் அளிக்க சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அனுமதி?

Print PDF

தினமலர்    09.08.2012

மாநகராட்சிக்கு அதிகாரம் அளிக்க சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அனுமதி?

சென்னை:சென்னையில், 800 சதுர அடிக்கு குறைவான மனைகளில் கட்டட அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்க மாநகராட்சிக்கு அதிகாரம் அளிக்க சி.எம்.டி.ஏ., நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:

குறைந்த பரப்பில்...

சென்னையில், முன்பு 40 வீடுகள் மட்டும் இருந்த இடத்தில், தற்போது, 1,000 குடும்பங்கள் வசிக்கும் அளவுக்கு வீடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரிக்கும்போது, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் வீடு கட்ட குறைந்தபட்ச பரப்பளவு, 800 சதுர அடியாக இருக்க வேண்டும் என்று வளர்ச்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு குறைவான பரப்பளவு நிலம் வைத்திருப்பவர், உரிய அனுமதியுடன் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, திட்ட அனுமதி வழங்குவதற்கான குறைந்தபட்ச பரப்பளவு விகிதத்தை குறைக்குமாறு சி.எம்.டி.ஏ., விடம் பல தடவை முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்கும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூடுதல் அதிகாரம்

இது குறித்து சி.எம்.டி.ஏ., துணை தலைவரும், வீட்டுவசதித்துறை செயலருமான பணீந்திர ரெட்டி கூறியதாவது:இந்த கோரிக்கையை முழுமையாக ஏற்பது சாத்தியமில்லை. எனினும், குடும்ப பங்கீடு மூலமும், அதிக பரப்பு நிலம் வைத்திருத்து அதன் ஒரு பகுதி விற்கப்பட்டதால், விரிவாக்க பணிகளுக்கு நிலம் எடுக்கப்பட்டதால் பரப்பு குறைதல் போன்ற காரணங்களால், 800 சதுர அடிக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்ட சி.எம்.டி.ஏ., அனுமதி அளிக்கிறது.

இந்த       அதிகாரத்தை       மாநகராட்சிக்கு    அளிப்பதற்கான         கருத்து     பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு பணீந்திர ரெட்டி கூறினார்.

Last Updated on Friday, 10 August 2012 05:40
 


Page 24 of 96