Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நரேலா துணை நகரம் டெல்லி மேம்பாட்டு ஆணைய திட்டத்துக்கு அனுமதி நிறுத்தம்

Print PDF

தினகரன் 23.11.2010

நரேலா துணை நகரம் டெல்லி மேம்பாட்டு ஆணைய திட்டத்துக்கு அனுமதி நிறுத்தம்

புதுடெல்லி, நவ. 23: நரேலா துணை நகரத்தில் குடியிருப்பு பகுதியை கொண்டு வருவது உள்ளிட்ட டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி.டி..) 6 திட்டத்துக்கு மாநில நிபுணர்கள் மதிப்பீட்டு குழு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

டி.டி.. சார்பில் நரேலா துணை நகரத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, செக்டர் ஜி2 மற்றும் ஜி6, ஜி7 மற்றும் ஜி8 திட்டம், நரேலா மேம்பாட்டு பகுதி 12, நரேலா மேம்பாட்டு பகுதி 12ல் ஒருங்கிணைந்த கட்டண காம்பளக்ஸ், செக்டர் ஜி3, ஜி4 ஆகியவற்றில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக மாநில நிபுணர்கள் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், டி.டி.. தன்னுடைய திட்டங்களில் மண்டல மேம்பாட்டு திட்டங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை என்று கூறி, இதற்கு அனுமதி வழங்குவதை குழு நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து குழுவின் அதிகாரிகள் கூறுகையில், "திட்டத்தை தயாரிப்பவர்கள் முதலில் மண்டல மேம்பாட்டு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும். அதை தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியாக அனுமதி பெற வேண்டும். இறுதியாகத்தான் நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவுக்கு வரவேண்டும்" என்றார்.

 

வசந்த் கஞ்ச் உட்பட முக்கிய பகுதிகளில் 16,000 அடுக்குமாடி வீடுகள்

Print PDF

தினகரன்             22.11.2010

வசந்த் கஞ்ச் உட்பட முக்கிய பகுதிகளில் 16,000 அடுக்குமாடி வீடுகள்

புதுடெல்லி, நவ.22: டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையம் சார்பில் 16,000 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகின்றன. வசந்த் கஞ்ச், முக ர்ஜி நகர் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படும்.

இதுபற்றி டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் 16,000 அடுக்குமாடி வீடுகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் வசந்த் கஞ்ச், முகர்ஜி நகர், மோதியாகான், கல்யாண் விகார், ஜசோலா, துவாரகா, ரோகிணி, நரேலா, ஜபாராபாத், கொண்ட்லி, கரோலி ஆகிய முக்கிய பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்படும்.

ஒரு அறைகொண்ட வீடு, 2 மற்றும் 3 படுக்கை அறைகளுடன் கூடிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். ஒரு அறை கொண்ட வீடுகள் நரேலா, திருலோக புரி, மற்றும் சிவாஜி என்கிளேவ் ஆகிய பகுதிகளில் கட்டப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் 25ம் தேதி முதல் பெறப்படுகின்றன. விண்ணப்ப மனுக்கள் பெற டிசம்பர் 25 ம் தேதி கடைசி நாள். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டின் விலை ரூ3 லட்சம் முதல் 6 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மற்ற வீடுகளின் விலை அதன் பரப்பளவுக்கு ஏற்ப ரூ9 லட்சம் முதல் 1.12 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது சதுர அடியின் விலை ரூ1,536 முதல் ரூ6,069 வரை இருக்கும். 18 வயதான யாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு டெல்லியில் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.

இதற்கான விண்ணப்ப மனுக்களை 25ம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்டேட் வங்கி கிளைகள், ஐடிபிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, சென்டிரல் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப மனுக்களுடன் முன்பணமாக ரூ1.5 லட்சம் கட்ட வேண்டும். ஒரு அறை வீடுகளுக்கு முன் வைப்பு தொகையாக ரூ50,000 செலுத்த வேண்டும்.

குலுக்கலில் வீடு கிடைக்காவிட்டால் இந்த முன் வைப்புத் தொகை விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். விண்ணப்பத்துடன் ஒவ்வொருவரும் பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், முகவரி பரிசோதனைக்காக ரேஷன் கார்டு போன்றவற்றின் நகலையும் இணைக்க வேண்டும்.

போலி விண்ணப்பதாரர்களை தவிர்க்கும் விதத்தில், ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த வீடுகளில் 17.5 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் பழங்குடியினருக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் கணவரை இழந்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக தலா ஒரு சதவீதம் ஒதுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அனுமதியற்ற கட்டிடங்கள் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்

Print PDF

தினகரன்             22.11.2010

அனுமதியற்ற கட்டிடங்கள் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்

புதுடெல்லி, நவ. 22: அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸ் ஒத்துழைக்க வேண்டும் என்று பணிக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க்கில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானார்கள். இந்தக்கட்டிடத்தில் 2 மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலத்துக்கு வந்தது. அனுமதியின்றி கட்டிய தளங்களுக்காக மாதந்தோறும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருக்கு கட்டிட உரிமையாளர் அம்ரித்பால் சிங் லஞ்சம் கொடு த்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாநகராட்சி மும்முரமாக உள்ளது. இதுபற்றி மாநகராட்சியின் பணிக்குழு தலைவர் ஜக்தீஷ் மேம்கெய்ன் கூறியதாவது:

அனுமதியற்ற கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் துணையின்றி செய்ய முடியாது என்பது பொதுமக்களிடையே பரவலாக இருக்கும் கருத்தாக உள்ளது. அதை பயன்படுத்தி பணம் வசூலிக்கிறார்கள் என்பதும் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. சில லஞ்ச அதிகாரிகளால் மாநகராட்சி மற்றும் போலீஸ் இரண்டின் மீதும் ஒட்டுமொத்தமாக கறை ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் செல்வதற்கு முன்பாகவே, அதுபற்றிய தகவலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு உள்ளூர் போலீசார் தெரிவித்து விடுகின்றனர். போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தால் அங்கு ஆக்கிரமிப்பு எதுவும் இருக்காது.

அனுமதியற்ற கட்டிடங்கள், அரசு நிலங்கள்&சாலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றும் நடவடி க்கை தொடர்பான மாநகராட்சியின் நடவடிக் கைகளுக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு போலீஸ் கமிஷனர் பிரிஜேஷ் குமார் குப்தா உறுதியளிக்க வேண்டும். அனுமதியற்ற கட்டிடங்களின் உரிமையாளர்கள், ஆக்கிரமிப்ப £ளர் களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறோம். சட்டவிரோதமாக கட்டப்பட்டு ள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளில் போலீசாருக்கு உள்ள தொடர்பு பற்றி உரிய விசாரணைக்கு கமிஷனர் உத்தரவிட வேண்டும் என்றார்.

 


Page 34 of 96