Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சி திட்டப் பணிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Print PDF
தினமணி     18.05.2010

வளர்ச்சி திட்டப் பணிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

நாகர்கோவில், மே 18: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

முக்கியமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, வருவாய் அலுவலர் கலைச்செல்வன், கோட்டாட்சியர்கள் நடராஜன், முருகவேல், வட்டாட்சியர்கள் நாகராஜன், பொன்னுசாமி, கிருஷ்ணன், ஊராட்சி உதவி இயக்குநர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 19 May 2010 09:24