தினமலர் 20.05.2010
குடிநீர் மேல்நிலைதொட்டி பராமரிப்பு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்
பழநி:குடிநீர் மேல்நிலைதொட்டிகளை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மாதந்தோறும் 1, 15 தேதிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்டபடி தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை என சுகாதாரத்துறை நடத் திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.தனி மாவட்டத்தில் காலரா ஏற்பட்டுள்ளதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக மேல்நிலை தொட்டிகளை உள்ளாட்சி நிர்வாகம் சுத்தம் செய்வதில் சுணக் கம் காட்டக்கூடாது. குறிப் பிட்ட தேதிகளில் அவசியம் சுத்தம் செய்ய வேண் டும். குளோரினேசன் முறையாக செய்ய வேண்டும். இதற்கான அறிக்கையை சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும் என செயல் அதிகாரிகள், கமிஷனர்களுக்கு சுகாதாரத்துறையால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.