தினமலர் 21.05.2010
பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு
தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற செயற்பொறியாளர் ஒருவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் 38.66 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் பணிகள் நிறைவேற்றப் பட உள்ள இதற்கான டெண்டர் விடப்பட்டு மே 25 ல் சென்னையில் திறக்கப்பட உள்ளன.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. திட்டத்தை நிறைவேற்ற கோட்ட அளவில் குடிநீர் வடிகால்வாரிய செயற் பொறியாளர் ரத்தினவேல் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், இரண்டு உதவி பொறியாளர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை செயல்படுத்துவர்.