தினகரன் 21.05.2010
குறிஞ்சிப்பாடியில் குடோனுக்கு சீல்
நெய்வேலி, மே 21 : குறிஞ்சிப்பாடியில் கலப்பட உணவுபொருட்கள் தயாரித்த ரைஸ்மில் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் கலப்பட உணவு பொருட்கள் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கடலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா தலைமையில் வடலூர் மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன், கடலூர் துணை இயக்குனரின் தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் ஜனகராஜன், வட் டார மருத்துவ மேற்பார்வை அலுவலர் சுப்ரமணியன், உணவு ஆய்வாளர் தயாநிதி, சுகாதார ஆய்வாளர் சுப்பு ராமலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் குறிஞ்சிப்பாடியில் உள்ள ரைஸ்மில்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாட்டை வீதியில் அருள் என்பவருக்கு சொந்தமான மாவுமில் , குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு மிளகாய்த்தூள் மல்லித்தூள் ஆகியவற்றை சோதனை செய்ததில் அதில் அரிசி மாவு கலந்தது தெரியவந்தது. தூளின் மாதிரியை எடுத்து பகுப்பாய்வுக்காக சென்னைக்கு அனுப்பினர். ரைஸ்மில் மற்றும் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் ரைஸ்மில் உரிமையாளர் அருள் மீது உணவு கலப்பட தடுப்பு சட்டம், பொது சுகாதார திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யபட்டது. குடோனில் இருந்த ரூ.1 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சேவியர், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதிகாரிகள் அதிரடி