Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவீன இறைச்சிக் கூடத்தில் மேயர், ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி         25.05.2010

நவீன இறைச்சிக் கூடத்தில் மேயர், ஆணையர் ஆய்வு

திருச்சி, மே 24: திருச்சி ஜி.கார்னர் பகுதியிலுள்ள நவீன இறைச்சிக் கூடத்தை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் பகுதியில் ரூ. 1.6 கோடியில் நவீன இறைச்சிக் கூடம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தக் கூடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதை மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கால்நடைகள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உண்பதற்கு ஏற்றது என்பதை உறுதி செய்து, தர முத்திரை பதிக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, மாநகராட்சிப் பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 169 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேயரும், ஆணையரும் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது, நிர்வாகப் பொறியாளர் எஸ். அருணாசலம், உதவி ஆணையர் (பொ) ஆர். மனோகரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயபாரதி, மு. வெங்கட்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.