Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரவளர்ச்சித் துறை தகவல் குடிநீர் வாரியம் தனியார் மயம் இல்லை

Print PDF

தினகரன்     25.05.2010

நகரவளர்ச்சித் துறை தகவல் குடிநீர் வாரியம் தனியார் மயம் இல்லை

பெங்களூர், மே 25: மாநிலத்தில் இயங்கி வரும் மாநகராட்சிகளில் உள்ள குடிநீர் வாரியங்கள் தனியார் மயம் செய்யப்படாது என்று நகர வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மாநிலத்தில் இயங்கி வரும் நகர சபை மற்றும் டவுன் முனிசிபாலிட்டிகளில் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில், கன்னட கங்கா திட்டம் செயல்படுத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் 16 நகரசபைகளில் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தை மாநில நகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகல் வாரியம் செயல்படுத்துகிறது. இதற்கு தேவையான நிதி நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஹூப்ளி&தார்வார், குல்பர்கா, பெல்காம் ஆகிய மாநகரங்களில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் வழங்கபட்டுள்ளது. இதில் பலன் கிடைக்கும் பட்சத்தில், பிற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதே சமயத்தில் மாநிலத்தில் இயங்கி வரும் மாநகராட்சிகளில் செயல்படும் குடிநீர் வாரியங்கள் எந்த நிலையிலும் தனியாரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது. மாநகராட்சி கட்டுப்பாட்டில், ஒப்பந்த அடிப்படையில் சில பணி கள் மட்டுமே ஒப் படைக்கப்படும் என்றார்.