தினமணி 26.05.2010
மாநகராட்சி இடத்தில் டாஸ்மாக் பார்: அதிகாரி உத்தரவின் பேரில் இடிப்புமதுரை
, மே 25: மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த டாஸ்மாக் பார் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை புல்டோசர் உதவியுடன் இடிக்கப்பட்டது. அண்ணா நகர் குருவிக்காரன் சாலை பாலம் அருகே உள்ளது அரசு டாஸ்மாக் பார். இதன் அருகிலேயே தனியாருக்குச் சொந்தமான பார் உள்ளது.பார் உள்ள இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என்றும்
, அதை ஆக்கிரமித்து பார் நடத்தப்பட்டு வருவதாகவும் அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்
, இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் உத்தரவின்பேரில் நகரமைப்பு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த பார் செயல்பட்டு வந்த 28 சென்ட் நிலம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அந்த இடித்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்
. அதன்படி நகரமைப்பு அதிகாரி முருகேசன் முன்னிலையில் அந்த இடத்தை தொழிலாளர்கள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர்.