Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 28.06.2010

மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

வத்திராயிருப்பு, மே 28: வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சியில் 1450 குடியிருப்பு இணைப்புகள் உள்ளன. குடிநீர் இணைப்புகளில் சிலர் சட்டவிரோதமாக மின்மோட்டர் பொருத்தி குடிநீரை திருடுவதாக புகார் வந்துள்ளது. இதனால் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே மின்மோட்டாரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் முன்னறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.