Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன் 31.05.2010

வரி செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், மே 31: திருப்பூர் அடுத்துள்ள நல்லு£ர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.

இதில் பெரும்பாலா னோர் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர்வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் வரி வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும், ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்தும், சிலர் வரி செலுத்தாமல் நகராட்சி நிர்வாகத்தை ஏமாற்றி வருகின்றனர். இதையடுத்து வரியினங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட் டது.

இதுகுறித்து செயல் அலுவலர் ராமசாமி (பொ றுப்பு) கூறுகையில், குடிநீர்வரி, வீட்டுவரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்தாதவர்கள், விரைவில் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றார். நல்லூர் செயல் அலுவலர் எச்சரிக்கை