Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முறைகேடான குடிநீர் இணைப்புக்களை துண்டிக்க பெரியகுளம் நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 01.06.2010

முறைகேடான குடிநீர் இணைப்புக்களை துண்டிக்க பெரியகுளம் நகராட்சி முடிவு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக் களை துண்டிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சீத்தாலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அப்துல்சமது, கமிஷனர் (பொறுப்பு) மோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: சந்தானம்: நகர்புற வேலைவாய்ப்பு எஸ். ஜே.எஸ்.ஆர்.ஒய் திட்டத் தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவுன்சிலர்களிடம் தெரிவிக்கவில்லை. அப்துல்ரசாக்: நகராட்சிக்கு சொந்தமான புல்பண்ணையில் மரங்கள் கடத்தப்படுகின்றன. இவற்றை பாதுகாக்கவேண்டும். முகமது சலீம்: கல்லார் ரோடு- வடக்கு பாரஸ்ட் ரோடு சந்தில் உள்ள கழிவறையில் பாதாளசாக்கடை உடைந்துள்ளது. இதனை சரிசெய்யாததால் அருகில் உள்ள வராகநதியில் கழிவுகள் கலக்கிறது. கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும். ராஜா: நகராட்சி பிரசவ ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையம் சுகாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது.

முரளி: புதிதாக குடிநீர்குழாய் இணைப்பு கொடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகின்றனர். முகமதுசலீம்: நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில், வேறு நபர்கள் குடியிருக்கின்றனர். ஓய்வு பெற்ற பணியாளர்கள், வீடுகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும். ஜீவா: நகராட்சி எல்கை அருகேயுள்ள தென்கரை பேரூராட்சி, கீழவடகரை ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த சிலர், முறைகேடாக நகராட்சி குடிநீர் இணைப்களை அமைத்துள்ளனர். இதனால் சில வார்டுகளில் குடிநீர் கிடைக்காமல் உள்ளது.கமிஷனர்: முறைகேடான இணைப்புகள் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.