தினகரன் 01.06.2010
மாநகராட்சி மண்டல சேவை மையத்தில் கமிஷனர் ஆய்வு
நெல்லை, ஜூன் 1: நெல்லை மாநகராட்சி மண்டல சேவை மையத்தில் நேற்று கமிஷனர் சுப்பையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் கடந்த 2 நாட்களாக மண்டலம் வாரியாக அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார். நேற்று நெல்லை மண்டல சேவை மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வரி செலுத்த வரும் நபர்களுக்கு உரிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் வரி பாக்கியை முழுவதுமாக செலுத்துமாறு கேட்டு கொண்டார். பாளை மண்டலத்தில் ஆய்வு செய்த கமிஷனர், அங்கு அடிக்கடி தீப்பற்றி எரியும் ஆவண காப்பக அறையை சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அதன் பேரில் ஆவண அறை சரி செய்யப்பட்டது.