தினமலர் 04.06.2010
மேலூர் நகராட்சி எச்சரிக்கை
மேலூர்: மேலூர் நகரில் உள்ள 1 முதல் 27 வார்டுகளில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் முறைப்படுத்தப்பட உள்ளன. நகராட்சி அனுமதியின்றி தன்னிச்சையாக குடிநீர் குழாய் போட்டுள்ளவர்கள் உடனடியாக, அதனை தெரிவித்து முறைப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அய்யனார் அறிவித்துள்ளார்.