தினகரன் 04.06.2010
சுகாதாரமற்ற பொருட்கள் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி அதிகாரி எச்சரிக்கை
புதுக்கோட்டை
, ஜூன் 4: சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் பொருட்கள் கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.புதுக்கோட்டை நகராட்சி நகர் நல அலுவலர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
: சுகாதாரமற்ற குடிநீர், பழ ஜூஸ் மற்றும் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதால் காலரா, வயிற்று போக்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திறந்தவெளியில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது. குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.உணவக உரிமையாளர்கள் எல்லாரும் ஜூஸ்
, குளிர்பானம் தயாரிக்க சுத்தமான, சுகாதாரமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் பொருட்களை கண்டறிந்தால் அவை கைப்பற்றி அழிக்கப்படும். கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.