Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியார் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 09.06.2010

தனியார் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த மாநகராட்சி திட்டம்

சென்னை: நகரிலிருக்கும் தனியார் வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நகரில் பல இடங்களில், தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளது.

இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இடத்திற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூல் செய்வது, அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்வது, அடிக்கடி வாகனம் காணாமல் போவது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துவது போன்ற புகார்கள், மாநகராட்சிக்கு வந்த வண்ணம் இருந்தது. தனியார் வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் காணாமல் போனால் கூட சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், நகரிலுள்ள தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் முறைப்படுத்தப்படும் என்று மேயர் சுப்ரமணியன் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சியின் வருவாய் துறையினர் ஆய்வு செய்ததில், நகரில் 180 இடங்களில் சிறிய, பெரிய தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்திலும், ஒரே சீரான கட்டணம் வசூல் செய்வது, வாகனங்களை பாதுகாப்பாக வைப்பது, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் வாகன நிறுத்தம் செய்வது குறித்து மாநகராட்சி ஆலோசித்து, வரும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தனியார் வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.